30 நவ., 2011

தொலைதூரக்காதலாய்

















மழையே கருவாய்
நிலைமாறிய

கவியாய்
மனதை மயக்கும் 
நிலையாய்
நிறம் மாறும்
மனம் விரும்பும்

மழையே விடலைப் 
பருவத்தின் 
தொலைதூரக்காதலாய் 
அணைத்துக்கொள்ளும்.


மழையா!
பள்ளிக்கு விடுமுறை 
மழையா!
காகித கப்பல் ஓட்டம்
மழையா 
சாரலோடு ஆட்டம் 
மழையா!
ஆனந்த ஆர்பாட்டம்

இளமை பருவத்தை 
இன்றும் நினைக்க 
இனிக்கும்...
தொலைதுராக் 
காதல் மழை

மண்ணுக்கும் 
மணக்கும் மலராய்
விதைக்கும்
விதைக்கு உயிராய்
எனக்கு உறவாய் 
இன்றும் மழையே
என் தொலைதூரக் 
காதலியாய்...

சிறு துளியோ 
பட்டால் சிலிர்க்கும்
மனதை மயக்கும்
நனைந்து சென்றால்   
இனிய இன்பத்தை
கொடுக்கும்...

இந்த மழையோ
மலைக்குள் 
அருவியாய்
எனக்குள்
உணர்வாய் 
உருமாறி 

என்றும் 
காதல் பேசும் 
மழையே 
தொலைதூரக்காதலாய் 

முதியோர் இல்லத்தில்...


அப்பாவின் 
இறப்புக்கு பின் 
விதவையின் 
விலாசத்தை 
மாற்றாமல் 
எனக்காக 
வாழ்ந்தவள்.


உன் அன்புக்கு 
அடிபணிந்தே 
ஒப்புக்கொண்டேன் 
பார்க்காமலே 
என் இல்வாழ்கையை.


நம் நம்பிக்கை 
மாறி தான் போனது.


என் முன் நீயும்,
உன் முன் நானும் 
அவமானம் படாமல் 
நாம் வாழ 


ஒப்புக்கொண்டாய் 
முதியோர் இல்லத்தில் 
நீ வாழ...



சொல்லமுடியா 
சூழ்நிலையில் 

திருத்த முடியா 
நிலையில் 
நான்
இருப்பதால் 




எனக்கு மட்டும் தான்
தெரியும் 
என்  
பாசத்தை காட்ட 
உன் பாசத்தோடு 
நான் வாழ
சூழ்ச்சி செய்தது...


இன்றும் நான்
உன் மகனாய்
அலுவலக 
மதிய இடைவெளியில் 
நீ ஊட்டி விடும் 
சாதத்தில் மகிழ்கிறேன்...

29 நவ., 2011

சனிஸ் டிஸ்ஸா மாற்றிவிடு...


சர்வர்:
முதலாளி சாம்பாரில் பாச்சை விழுந்து போச்சு என்ன செய்ய ?
முதலாளி:
சனிஸ் டிஸ்ஸா மாற்றிவிடு...
===============================
சர்வர் இன்று என்ன ஸ்பெஷல்?

சர்வர்:

இன்று எல்லாமே ஸ்பெஷல் தான் 
எங்க சமையல்காரர் லீவு 
============================

குமரி கிழவியாய் ஆகி...

சிறைக்குள் 
சில நாட்கள் 
பிணையத்தில் 
வெளியேவும் 
வாய்தாக்களும் 
வாங்கப்பட்டு 
நடத்தப்பட்டன...

காலங்கள் 
வருடமாய் மாறி 
குமரி 
கிழவியாய் 
ஆகி...

ஆராய்ந்து பார்த்ததில் 
போதிய ஆதரமில்லாமல் 
போகவே 
இவர் குற்றமற்றவர் 
என்று கருதி 
இந்த  மனு
தள்ளுபடி
செய்யப்படுகிறது.

சட்டம் தன்
கடமைக்கு உட்பட்டு 
எழுதுகோல் 
முறிக்கப்பட்ட 
நிலையில்
முடித்துக்கொண்டது...

28 நவ., 2011

இனி ஒரு பிறவி ?


மனிதனாக பிறந்து
மரத்தை அழித்து
மழையை இழந்து,
உலகத்தை 
மாசுபடுத்தும்
நிலையில்...

நானும்
இருப்பதைக் கண்டு,
வெட்கப்படுகிறேன்
தடுக்க நிலை அறியாமல்.
வேண்டுமா 
இனி ஒரு பிறவி 
என்ற கேள்விக்குறி...

தீவிரவாதத்தில்
தீவிர வாதத்தில்,
இணைந்து ,இணைத்து 
மனிதனே
மனிதனை  கொல்லும்
நிலை அறிந்தும்...

தடுக்க நிலை அறியாமல்
வேதனையில் நான்
மீண்டும் எனக்கு
வேண்டுமா 
இனி ஒரு பிறவி ?

மதம்,சாதி, என்றும்
மொழி வெறி கொண்டும்,
அலைகின்ற 
மனித மிருகத்தோடு
வேதனையோடு
விரக்தியோடு
வாழும் வகையில்
தடுக்க நிலை 
அறியாத நிலையில்
வேண்டுமா 
இனி ஒரு பிறவி 

துறவு தன்னை 
இழந்தநிலையில் 
துகிலுரிக்கும் 
ஆசாமி
நிலை அறிந்தும்...

பகல் வேடம் போடும் 
அரசியல்வாதிகளை
அறிந்தும்,புரிந்தும் 
வாய் திறக்க 
முடியவில்லை 
தடுக்க வழியில்லை 

தவறு என்று தெரிந்தும்
தேவைக்கு லஞ்சம் 
தரும் நிலையில்...

கட்டாயத்தோடு
நானுமிருந்தும்
தவறாய் போகும்
உலகம் கண்டு

கண்டும் ,காணமல்
ஒதுங்கும் நிலையை 
பார்த்து  கேட்கிறது மனம் 

ஒரு கேள்வி
வேண்டுமா 
இனி ஒரு பிறவி ?

கடி ஜோக் கடித்துவிட்டது...


டாக்டர் :
என்ன வாயெல்லாம் ரத்தம்...

நோயாளி:
உங்கள் கடி ஜோக் தான் 
கடித்துவிட்டது...
================
நோயாளி :
பல்லுல ஓட்டை 

டாக்டர்:
சிமென்ட் வைத்து அடைத்துவிடலாம்.

நோயாளி :
சிமென்ட் வைத்து அடைக்க நீங்க ஏன் 
கொத்தனாரே போதுமே...
=================
நோயாளி :
இது என் அப்பா பல் செட் 
என் வாய்க்கு தகுந்த மாதிரி ஆல்டர் பண்ணி 
தாங்க..

டாகடர்:
அது மாதிரி செய்யமுடியாது .

நோயாளி :
போனவாரம் எங்க அப்பா பெரிய 
சட்டையே 
டைலர் ஆல்டர் பண்ணிதந்தாரே 
இந்த சின்ன பல் செட்டை செய்யமுடியாதா ?

டாக்டர்:
 

27 நவ., 2011

ஈழத்தில் சுவாசிக்கும்.


ஈழம்!
இறந்தவர்களின் கனவு
இரத்தத்தை சிந்தி 
உறவுகளின்
உயிர்களை
இழந்தவர்களின்,
உணர்வு...

தோல்வியே 
கருவாகி
களம் காண 
வழியானது
இனத்தைக் 
காக்கும்
கவசமானது.

வரும் சுதந்திரம்
கிடைக்கும் அதிகாரம்
என்ற எண்ணத்தில் 
மண்ணுக்குள்
புதைந்த விதைகள்
மரமாகி பூக்கும் 
ஈழம் மலரும்

நகைக்கும் கூட்டமே
வரலாறு பாருங்கள்!
சுதந்திரப் போராட்டம்
எல்லாம் உடனே 
கிடைக்கவில்லை
கிடைத்ததில்லை!

ஆதிக்கவெறியர்கள்
அழிந்தததை 
இந்திய
வரலாறு சொல்லும்,
1947 ஆண்டை பார்த்தால்
விடை தெரியும்
உண்மை சொல்லும்
நம்பிக்கைக்கொள்ளும்...

நம்பிக்கையே வாழ்க்கை.
நாளை மலரும் 
ஈழம் என்பதை,
நாளும் எண்ணும் 
மனதை
மறக்கமாட்டோம்

ஈழத்தில் சுதந்திர
தமிழ்க் காற்றில் 
எங்கள் சுவாசம்
சுவாசிக்காமல் 
விடமாட்டோம்!

உறுதியான உயில்
உயிராகி
உரமாகி போனது.
உயிர் போனாலும் ...

உறவுக்கு
ஈழம் கிடைக்கும்
கிடைக்க 
புதுத்  தலைமை பிறக்கும்!

வலிகள் போக்க,
விடியலாய் வழிகள்
கிடைக்கும் 
எங்கள் இல்லங்கள் 
முளைக்க
ஈழத்தில் சுவாசிக்கும்.

வாழ்கையை தேடி...

வாலிபத்தில் 
வறுமை
இணைந்துக்கொள்ள 
வாலிபத்தை 
விற்றதை 
அறியாமல் 


கனவுகளோடு 
எதிர்பார்த்த 
வாழ்க்கையை 
வாழ்ந்து பார்க்க 



களமும் 
காலமும் 
கடல் கடந்து 
போகச் சொல்லவே

உள்ளத்தில் 
ஆசைகளை 
பூட்டிவிட்டு 
பயணம் வந்தவர்கள் 
கோடி..

வாழக்கையை 
வாழமுடியாமலும்,
கைப் பிடித்தவளை 
மறக்க முடியாமலும்


சடலமாய் 
சகலமும் 
இழந்து 

இரவுகள் 
இன்னல்களாய் இருக்க
இமைகளும்
மூட மறுக்க 

இரவோ தூக்கத்தை 
துக்கமாய் தந்து போகும்.
முப்பது நாள் 
விடுமுறைக்கு 

முந்நூறு

நாட்களுடன் 
போராட்டம்.


கனவுக்குள் 
அடைக்கப்பட்ட 
வாழ்கையாய்
வாழும் 
மனிதர்கள் கோடி...


வாலிபத்தை 
தொலைத்த 
இதயங்கள் இங்கே...



வாழ்கையை தேடி
காரணங்கள் 
சொல்லி இன்றும்...

பெண்ணினம்...


பெண்ணினம் பற்றி 
தீவிர முழக்கம் 
ஆண்கள் போராட்டம் 


புதுமை பெண்ணுக்கு 
புத்துயிர் தர 
ஆண்கள் பரிந்துரை 


அட போங்கடா 
விட்டால் போதும் 
விட்டயிடத்தை 
பிடிப்போம் 
பெண்ணினம் 
செயலில்...


(அங்கதக் கவிதை ஒரு பார்வையில் )

மல்லிகை...


மனிதர்கள் 
தன் ஆசைக்கு 
பறித்து வந்து 
கட்டி வைத்து 
அழகு பார்த்து 
கசக்கி எறிந்தனர்
ஆசைகள் 
அடங்கியவுடன் 


வாடிய மலராய்
நிறமாறி 
இறக்கும் முன் ...
மல்லிகை 
கதறி அழுதது...

26 நவ., 2011

இருக்காது சரிசமம்...


பேருந்துகளிலும்
புகைவண்டியிலும்
ஒன்றாய் பயணிக்க...

மருத்துவமனையில்
ஒன்றாய் மருத்துவம்
பார்க்க..

ரத்தம் தானத்துக்கும்
உடல் கூறு  மாற்று
அறுவை சிகிச்சைக்கும்
சம்மதம்...

மதம் என்று வந்துவிட்டால்
பிடிவாதம்
வாக்குவாதம்...


மனித நேயம்
பேசும் சட்டமும்
மதத்தில்
வசிக்கும்
வாசிக்கும்


எரித்தும்
குண்டு வைத்து
நடத்தியும்
கொல்லும் மனம்

இருக்கும் வரை
இருக்காது
சரிசமம்...

முட்டைக்கு ஏக கிராக்கி...சிரிக்க மட்டும்


வாத்தியார்:
இது என்னடா எல்லா பேப்பரிலும் 
கடைசியா ஒரு வரி 
லாலாக் கடை முட்டை சாப்பிடுங்க 
பேப்பரை திருத்துங்க என்று இருக்கு...


மாணவன் :
லாலா முட்டை கடை எங்களுடையது 
சும்மா விளம்பரத்துக்கு தான் சார்.
=============================
அப்பா :
டேய் இங்கே வா ,இது என்ன எல்லா பரிச்சையிலும் 
சைபர் வாங்கி இருக்காய்?


மகன் :
அது சைபர் இல்லப்பா நம்மக் கடை முட்டை விளம்பரம் 
அதை தான் இப்படி வாத்தியார் போட்டுயிருக்கார்..
================================
என்ன சார் முட்டைக்  கடை ஓனரை போலிஸ் கைது பண்ணுது 


நேற்று சின்ன பையன் அரசியல்வாதியை   அடித்ததை  
தனக்கு சாதகமாய் வதந்தியை பரப்பிவிட்டார்...


எப்படி ?


எங்க கடை முட்டை குடித்து தான் சின்ன பையன் அரசியல்வாதியை 
அடித்தான்  என்று சொல்லவும் அவர் கடை முட்டைக்கு ஏக 
கிராக்கியா போச்சு...




வாய்ப்புக்கள்...



வாய்ப்புக்கள் 
வராமல் 
வாசப்படி அருகில்
ஒதிங்கியே நின்றது.



வெற்றின் வாய்ப்பு 
பக்கம் தான் 
அதை அறியமாலே 
பக்கங்கள் புரட்டப்படுகிறது 


வாதங்கள் 
மனசுக்குள் 
சண்டைப்போட்டு 
முடிவுக்கு வர...


நம்பிக்கை 
நலம் விசாரிக்க 
சுறு சுறுப்பானது
தேடல் வேட்டை 
அடுத்த 
வாய்ப்புக்கு...

கருச்சிதைவு


இன்பத்தின் 
மொழிகள் 
பேசி சிரிக்க...



இரவை 
அழைத்தது 
உறவு 




ஆலிங்கனத்தின் 
துணையோடு 
பயணம்...


நாளும் பந்தம் 
தொடர 
முளைத்தது...


முளைத்ததை 
சிதைக்க 
வாக்குவாதம்...


முடிவில் 
சிதைக்கப்பட்டது 
யார் என்றும்...
கொலை என்றும் 
அறியாமலே...


வருங்காலத்தை 
திட்டமிட்டு 
வரும் முன் 
தடுக்காமல் 
வளர விட்டு...


விதைக்கும் முன் 
யோசிக்காமல் 
புது உயிர் 
கொலையானது 
கோழைகளால்...

மழைத்தூறல்...ஹைக்கூ கவிதைகள்.



மழைத் தூறலில்
பூக்களில்லாமல் 
மணம்...
================
களைத்தது 
இரவின் மௌனத்தை
தூறல்...
===============
தூறிய தூறல் 
வீட்டுக்கூரைகளில் 
இசைத்தது...
=================
பூமிக்கு 
புனித நீராட்டுவிழா 
மழைத்தூறல்...
================

25 நவ., 2011

பொறுமை...



பொறுமைக்கு 
வலு  சேர்க்கும் 
பெருமை...

தோல்வியில் 
பொறுமை 
வெற்றிக்கு 
அணிச்சேர்க்கும் 

வறுமையிலும் 
பொறுமை
வாழ்க்கைக்கு 
வலிமை சேர்க்கும்.

இழப்பிலும் 
பொறுமை,
அமைதிப் படுத்தும்...

அகிலத்தை 
ஆழ பொறுமையே
ஆணிவேராகும்
நல் வழியாகும்...

பொறுமையே 
இறைவனுக்கு 
விருப்பம் 

பொறுமைக்கு 
மறு பெயர் தாய்மை,

பொறுமை 
இந்த தாய்மைக்கு..
தலையாட்டும்
தலைவணங்கும்....

விவசாயின் புலம்பல்...


வானம் பார்த்த 
பூமி...

மழையே
கையேந்தி 
நிற்கிறோம் 
இருக்கும் கொஞ்சம் 
நிலத்தில் 
நீர் பாசனம் 
செய்ய...

உன் வருகை 
மாறிப்போனதால் 
எங்கள் நிலைமையும் 
மாறித்தான் போனது 

விளை நிலங்களில் 
புதிய பாசனமாய் 
வீடுகள் 
அடுக்கு மாடிகள் என 
பதியம் போட்ட 
நிலையில்...

இருப்பதும் 
மாறாமல் இருக்க...
இருப்பதில் விதைக்க 
எங்களை ஏமாற்றாமல் 
அமைதியாய் வா...

அம்மா...





அம்மா!
ஆயிரம் சொந்தங்கள் 
வந்தாலும் 
உனக்கு நிகர் 
யார் அம்மா!


ஒவ்வொரு 
முறையும் 
நான் உன்னை 
பார்க்கும் போதும் 
பாசத்தோடு 
அணைக்கும் 
நிகழ்வுக்கு  
ஈடு ஏதம்மா .


நான் வருகிறேன் 
என்றாலே 
சிறு குழந்தையாய் 
நீ மாறுவாய்...


முடியாத நிலையிலும் 
முண்டியடித்து 
நீ சமைப்பாய்...


வேண்டாம் 
என்றாலும் 
கேட்கவா போறாய்


வகைக்கு ஒன்னு 
வேலைக்கு ஒன்னு 
என சமைத்து தான் 
முடிப்பாய் 


போதும் போதும் 
என சொன்னாலும் 
இன்னும் கொஞ்சம் 
என்று 
கொஞ்சியே 
வயிறு முட்ட
உண்ண வைப்பாய்..


நான் வளர்ந்து 
போனாலும் 
இன்னும் குழந்தையாய் 
எண்ணி ஊட்டி தான் 
விடுவாய் 

உன்னோடு நான் 
இருந்த ஒவ்வொரு 
வினாடிகளும் 
குழந்தையாய் தான் 
மாறிப்போவேன்...

நேற்று 
உன்னை விட்டு 
வந்த பின் 
உன்னோடு 
இருந்த நாட்களை 
நினைத்தப்படி...


அடுத்த விடுமுறை 
வரைக்கும் 
உன் நினைவுகள் 
சுமந்தபடி...

24 நவ., 2011

மதராஸி...


பாலைவன 
வனவாசத்தின் 
முதல் நாள் 


நான் பேசிய 
ஆங்கிலம் 
அவனுக்கு 
தெரியவில்லை 


அவன் பேசும் 
அரபியும் 
இந்தியும் 
எனக்கு 
புரியவில்லை 


எனது மௌனத்தை 
கலைத்து சொன்னான் 
ம்ம்ம் 
மதராஸி என்று 


வியந்து  போனேனன் 
அவன் அனுபவத்தை 
கண்டு...


தாமரை இலையின் 
தண்ணீரைத் தூளி 
போலவே 
ஒட்டாமல் உறவு 
இந்தியாவில் 
நாம்...

ரகசியம்...



பெண்ணிடம் 
ரகசியம் 
தங்காது 
சொல்லுவதுண்டு 

ரகசியம் 
கலையப்படலாம்
காரணம் பெண்ணல்ல
சூழ்நிலை...

வதந்திகளை 
பரபரப்பாய் 
சொல்லும் தினசரிகள்..
ஊடகங்கள் 
என்று தொடரும் 

அதில் ஆணுக்கும்
இடமுண்டு 
காதல் வந்தவுடன் 
நண்பனுடன்...

காலம் சென்றாலும் 
சொல்கிறான்
பழைய
ஒரு தலைக்காதலை...

இதில் பெண்கள் 
 மட்டுமா...
இல்லை 
மனித வர்க்கமே 
அடக்கம்...

பிணமாய்


பிணமாய் 
இருந்த இதயங்கள் 
இவனின் பிணத்தை 
பார்த்து 
உயிர்பிக்க...

வெட்டிய உறவுகள் 
ஒட்டிக்கொண்டன 
சாவு  வீட்டில்...


பங்காளி சண்டைகள் 
அழுகையோடு 
கரைக்கப்பட்டன


திட்டி தீர்த்த 
தூரத்து உறவுகளும் 


ஊர்காரர்களும் 
கண்ணீர் வடித்து 


மாலைகளோடு
மனம் மாற்றம்...


பெயரோடு வாழும்போது 
இவன் 
யார் என்றே 
புரியவில்லை 

இருக்கும் வரை 
இவன் மதிப்பு 
தெரியவில்லை 


மறைந்த பின்னே 
மறக்கும் மனங்கள்
இங்கே...


பிணமாய் 
போனபின்னே 
மரியாதைக்கு 
குறைவில்லை...

கையேந்தும் நிலை



குழந்தை தொழிலாளர் 
தடுப்பு
சட்டமுண்டு

கையேந்தும் 
குழந்தைகளுக்கு,
அரவணைப்பு எங்குண்டு 

பிள்ளை இல்லாத 
பெற்றோர்களும்,
இவர்களை தத்து எடுக்க
தயக்கமுண்டு

பெற்றோ
ர்களும் 
வயிற்று பசிக்கு 
பிச்ச எடுக்க 
பிள்ளைகளை
அனுப்புவதுண்டு
இதை தொழிலாகவே 
சிலர் செய்து 
வருவதுமுண்டு...

பெற்றோர்கள் 
இருந்தும் அனாதைகள் 
இவர்கள் 

அரவணைக்கும் குணம் 
மறைந்தது இங்கு 
ஆதரவு குரல்கள் 
மடிந்தது இங்கு...

கல்வியும் 
வியாபாரமானதால்...

விடலைகள் 
பசிக்கும் 
கல்விக்கும் 
கையேந்தும் நிலை 
இன்று...

பொய்கள்...




வித விதமான பொய்கள்
வீடுக்கு வீடு பேசப்படும்.


தெருவுக்கு தெரு
உண்மையாய் 
வாசிக்கப்படும் 

காதலில் 
கவிதையாய் 
நேசிக்கப்படும் 

நீ அழகானவள் 
என்று சொல்லியே 
காதலிக்கப்படும் 

விடுமுறைக்காக 
அலுவலகத்தில் 
முன்னுரைக்கப்படும்...

பொய்கள் கூட 
சில சமயம்
ரசிக்கப்படும்.

பொய்கள் கூடி 
பொதுக்கூட்டம் 
நடத்தப்படும்...

அதிக பொய்களே 
ஆட்சிக்கு அழைக்கப்படும் 

காலத்துக்கு ஏற்ற பொய்கள்
பேசப்படும்
புதிய வகையில்
சுவைக்கப்படும் 
சுவாசிக்கபடும்

பொய்கள் 
உருமாறி
மெய்யாய்
பிறக்கப்படும்...

இரவு...



பகலை மறைத்து 
நிலவாய் அவதரித்து
உறவுக்கு பாலமாய்
இனிமைக்கு பலமாய்
இந்த இனிய இரவு...

பூமியின் ஒரு பகுதி
பகலின் விழ்ச்சியோடு
நிலவின் ஆட்சி 
இரவாய் மாறி 
அழகுக்கு சாட்சி

அமைதிக்கு 
அடித்தளம்
தனிமைக் குதிரை 
ஆசைகளை 
அணைத்துக்கொண்டு
அனைத்தும் 
அடங்கிப்போகும் ...

அழகின் அரசி 
அன்பாய் பேசி 
இரவு இவளை 
இரவல் வாங்கினால்
மகிழ்ச்சி.

23 நவ., 2011

இலவச பேரலையால்...






கோபத்தை 
எழுச்சியை
ஐந்து வருடம் 
அடைக்காத்து 
சந்தர்ப்பம் பார்த்து 
வந்த நேரம்...


தேர்தலில் 
இலவச பேரலையால் 
அடித்து சொல்லப்பட்டு 
கொலை செய்யப்பட்டது 
ஜனநாயகம்...



============================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

நம்பிக்கையோடு....



ஓட்டு யாகசம் 
கேட்டு 
மனிதர்களுக்குள் 
ஜாதியை விதைத்து 
மதத்தை தூண்டி 
கலவர பூமியாய் 
மாற்ற ஊர்வலம் 


தேசம் 
விசமிகளை 
சுமந்தாலும் 
மதத்தால் 
எரிந்தாலும்...
ஜாதியால் 
வேறுபட்டாலும்...




மதம் பிடித்த 
மிருங்களுக்குள் 
மனித நேயத்தோடு 
வாழ்ந்த, வாழும் 
மகான்கள் 
பூமி என்பதால்...



நாளைய 
வல்லரசுவாய் 
மாறவும் 
இன்றைய 
வல்லரசுக்கும் 
சவாலாவும்...


இந்தியா 
இந்தியர்களின் 
கனவோடு 
நம்பிக்கையோடு...



========================



உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

22 நவ., 2011

அடி தாங்குவேன்... சிரிக்க மட்டும்















மாமியார் 
உங்களுக்கு மானம் சூடு சொரணை 
பற்றி தெரியுமா ?

மாப்பிளை:
அப்படி என்றால் .

மாமியார் 
அப்ப நீங்க தான் என் மகளுக்கு 
மாப்பிள்ளை .


=======================================
மாமியார்:


என் மகளை கலியாணம் பண்ண என்ன தகுதி 
இருக்கு உன்னிடம்?


மாப்பிளை :


எவ்வளவு அடித்தாலும் அடி தாங்குவேன் 
வலிக்குது என்று சொல்லவே மாட்டேன் 
நீங்கள் நம்பலாம் என்னை.


======================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

திட்டுறதே கேக்காதே...சிரிக்க மட்டும்.






உன் மனைவி இப்படி திட்டுறாங்க உனக்கு 
கோபமே வராதா ?

என்னை திட்டும் போதுஎல்லாம் காதை
விரலால்   அடைத்துவிடுவேன்,திட்டுறதே 
கேக்காதே...

====================================
கணவன் 
நீ என் மனைவி உன் புடவையை துவைக்கிறேன் 
சரி உங்க அம்மா புடவையும் துவை என்றால் 
என்னால் முடியாது ...
மனைவி:
எனக்கு நீங்க தாலிக் கட்டிருந்தாலும் 
பணம் கொடுத்து வாங்கியது எங்க அம்மாதான் 
அவங்க புடவையும் துவைக்கணும் தான் .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

நம்பிக்கையாய் உதிக்கும்...




தற்கொலைவாதிகளே
தற்கொலைக்கு என்ன அவசரம் 


வாழ்க்கையை பாருங்கள்.
காதல் மட்டுமா வாழ்க்கை 


சோகம் மட்டுமா நித்திலை
வறுமைக்கு பயந்தா 
வாழக்கை 


வேலைலில்லை என்ற சொல்லை,
சொல்வதா உன் வேலை
இது தானா   உன்னிலை 


இரைப்பைக்காக 
கழிவுநீரை சுத்தம் 
செய்கின்ற மனிதரை 
கண் முன் நிறுத்து...


அனுதினம் காகிதம் 
பொருக்கி வாழும் 


மனிதர்களை 
பார்த்தாவது 
உன் பாதை  மாற்று


காதல் காதல் 
என்று சொல்வதை 
அதில் அழிவதை 
தடுத்து 




உன்னால் முடியும்
வாழ்க்கை வாழ்வதின் 
அர்த்தம் அறிந்துக்கொள்


நம்பிகையே   சூரியன்.
உனக்கும் விடியல் உண்டு 
உன் திசையை 
கிழக்காய் மாற்று...


மேற்கில் 
இருள் மறைந்து 
வாழக்கைப் 
பாதை அறிந்து 
புதிய விடியல் 
நம்பிக்கையாய்
உதிக்கும்...



=====================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!