11 ஜன., 2015

முதிர் கன்னிகள்

புண்பட்ட மனதுக்கு 
கை பட நேரமில்லை ..
சொல் பட்டு வாழும் மனதுக்கு 
மாற்றமேஇல்லை..!
முதிர் கன்னிகள்..!

அதிகாலை கனவு 
மட்டும்
எங்களுக்கு பலிப்பதே இல்லை...!

6 ஜன., 2015

பாதக்கவிதை..

கடற்கரை மண்ணில்
நீ எழுதிய 
பாதக்கவிதையை இன்னும் 
ரசித்த வண்ணமாய் நான்...!

ஒளியை தேடி....!

நேற்று
இறந்து விட்ட துக்கத்தில்
நாம் இருக்கவில்லை.
நாளை
பிறக்க போகும் மகிழ்விலும்
நாம் துடிக்கவில்லை.
இன்று
வாழும் நிஜமான
நம் வாழ்க்கை
ஒளியை தேடி....!

நான்...


முரண்...

தந்திரமும்
மந்திரமாய்
வாலிப பருவத்தில்...!
கலக்கமும்
பயமும்
முதுமை நிலையில்...!
இந்த
மூன்றெழுத்தின்
முரண்...

மேடை..




கவலை கடக்கப்படுகிறது...!

நினைவுகளுடன் 
நிஜம் 
உறவாடும் போதே
கவலை கடக்கப்படுகிறது...!

தனிமை


தழுவலின் போதும்...!

பல கவலைகள்
தடுத்து நிறுத்தப்படும்
உண்மையான அன்பில்
உண்டாகும் 
ஒவ்வொரு 
தழுவலின் போதும்...!

3 ஜன., 2015

பச்சை செடி

பச்சை செடி
தன் நிறத்தை கழற்றி
புது வண்ணத்தை காட்டியது!
பூக்களாய்!

விழியால்

விழியால் சுட்ட புண்
தினந்தோறும்
உன் நினைவில் 
என்னை திளைக்க வைக்கும்..!

மணம் வீசும்...!

மனம் 
குணம்
அறியாமலே
முகம் தெரியாத 
முகநூல் நட்பூ
மனம் பேசும்
மணம் வீசும்...!

நெருடல் தான்

நெருடல் தான்
தேடலானது
தேடல் தான்
நிஜமானது
நிஜம் தான் 
காதலானது...!
தேடியது நிஜமா எனறும்
கிடைத்த பின் நெருக்கமாய்
இப்படி
எப்படி
என
இன்னும் நெருடல் தான் ...!

மறுபடியும் ...

நீயே வைத்துக்கொள்
உன் காதலையும்
என்னையும் சேர்த்து..!
மறுபடியும் 
காதலிக்காமலும்
காயப்படாமலும்
இருக்கலாம் அல்லவா...!

1 ஜன., 2015

காதல் கேளிக்கை!

விடலை பாடத்தில்
காதல் 
கேளிக்கை!
முதியோர் படிவத்தில்
காதல் 
கோரிக்கை...!

பூக்களாய்!








பச்சை செடி
தன் நிறத்தை கழற்றி
புது வண்ணத்தை காட்டியது!
பூக்களாய்!