17 நவ., 2014

மீட்டுத்தருமா வருங்காலம் ?





இதோ இவர்கள் வாழ்ந்தக்காலம்,
வசந்தக்காலம்! ,
அது இறந்தக்காலம்!
இனி வருவது அவசரக்காலம்!

கணினியோடு வாழும் நேரம்.
அதுப்போல் இருப்பது எக்காலம்?
அடுக்கு வீடுகளில் அடைந்தக்காலம்
அடுத்த வீடுக்கும் உறவில்லாத கலிகாலம்
ஆசைகளை துறந்த கோலம்
இதானே இன்றைய காலம் .
காதலாய் காற்று வீசும்.
வயல்களில் கதிர்கள் பேசும்.
வானம் தூவும் மழைக்காலம்,
மீண்டும் வருமா அந்தக்காலம்!
மீட்டுத்தருமா வருங்காலம் ?
இதோ இவர்கள் வாழ்ந்த காலம்
வசந்தக்காலம்
அது என்றும் நமக்கு இறந்த காலம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக