9 அக்., 2012

பஸ்சில் ஓட்டை: மழையில் நனைந்த பயணிகள் நடுவழியில் இறங்கி போராட்டம்

கொடுமுடி, அக். 9-

ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8.40 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பஸ் புறப்பட்ட சில நிமிடங்களில் மழை கொட்டியது. இதையடுத்து பஸ்சின் மேற்கூரையில் இருந்த ஓட்டைகள் வழியாக மழை தண்ணீர் ஒழுக தொடங்கியது. பயணிகள் லேசான ஒழுக்குதானே பின்னர் சரியாகிவிடும் என நினைத் தனர். ஆனால் ஈரோட்டில் மழை வெளுத்து கட்டியதால் ஒழுகுவது இன்னும் அதிகமானது. பயணிகளின் உடைகள், இருக்கைகள் முழுவதும் நனைந்து விட்டது. எங்கும் உட்காரவோ, நிற்கவோ இயலவில்லை.

இதைத்தொடர்ந்து பயணிகள் தங்கள் உடமைகளை தலைமீது வைத்து பஸ்சுக்குள் பயணம் செய்தனர். இந்த நிலையில் பஸ் 9.45 மணிக்கு கொடுமுடி வந்தது. அப்போதும் மழை நின்றபாடில்லை. இதனால் வெறுத்துபோன பயணிகள் பஸ்சைவிட்டு கீழே இறங்கினர். பின்னர் பஸ் முன்பு நின்று கொண்டு கண்டக்டரிடம் டிக்கெட் பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது கண்டக்டரும், டிரைவரும் கரூர்வரை வாருங்கள் அங்கு எங்கள் டெப்போ பஸ் வரும். அதில் ஏற்றி விடுகிறோம் என்று சொன்னதால் சமாதனம் அடைந்து மீண்டும் ஏறினர். கரூர் சென்ற பின்னர் பயணிகளை கண்டக்டர் வேறு பஸ்சில் ஏற்றி விட்டார். பயணிகளின் திடீர் போராட்டத்தால் கொடுமுடியில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக