3 அக்., 2012

பரபரப்பான சூழ்நிலையில் சோனியா காந்தி இன்று குஜராத் செல்கிறார்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ராஜ்கோட், அக்.3-

பரபரப்பான சூழ்நிலையில் சோனியா காந்தி இன்று குஜராத் செல்கிறார்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப்பயணம், மருத்துவ சிகிச்சை தொடர்பாக அரசு பணம் ரூ.1,880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, பத்திரிகை செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி வெளியிட்டுள்ள தகவலால் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், தான் கூறிய தகவல் தவறானது என்று காங்கிரஸ் நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார் என்று மோடியும் கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சோனியா குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகருக்கு இன்று (புதன்கிழமை) காலை 10 1/2 மணிக்கு செல்கிறார். விமான நிலையத்திலிருந்து நேராக மகாத்மா காந்தி தன் பள்ளிப்பருவத்தில் தங்கியிருந்த காந்தி சுமிருதிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணர் ஆசிரமம், பாலபவனுக்கும் சோனியா செல்கிறார்.

பின்னர் அவர் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடக்கிற விவசாயிகள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

சோனியாவின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு படையினர் (கறுப்பு பூனை படையினர்) ஏற்கனவே ராஜ்கோட் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். நகர் முழுவதும் உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரேஸ் கோர்ஸ் மைதான பகுதியில் மட்டுமே ஆயிரம் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சோனியா செல்லும் பாதையில் எல்லாம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிர வாகன தணிக்கை, கண்காணிப்பும் நடந்து வருகிறது.
நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக