3 அக்., 2012

சாவில் மர்மம்: யாசர் அராபத் உடலை மீண்டும் தோண்ட முடிவு


சாவில் மர்மம்: யாசர் அராபத் உடலை மீண்டும் தோண்ட முடிவு

லண்டன், அக். 2-

பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராபத். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது 75-வது வயதில் அவர் மரணம் அடைந்தார். பிரான்ஸ் சென்று இருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது அவரது உயிர் பிரிந்தது.

அவர் எய்ட்ஸ் நோய் அல்லது மர்ம நோயினால் இறந்து இருக்கலாம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. அராபத்துக்கு இஸ்ரேல் உளவாளி காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுத்து உள்ளது.

எனவே, அவரது உடலை சமாதியில் இருந்து மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பாலஸ்தீனத்தில் ரமல்லா நகருக்கு பிரான்சை சேர்ந்த 3 நீதிபதிகள் அடுத்த வாரம் வர உள்ளனர்.

அவர்கள் முன்னிலையில் சமாதி உடைக்கப்பட்டு யாசர் அராபத் உடல் மீண்டும் பிரரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.
நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக