2 அக்., 2012

காந்தியைப் போல 520 மாணவ மாணவிகள் வேடம் அணிந்து உலக சாதனை!










திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 520 மாணவ மாணவிகள் காந்தியடிகளைப் போல் வேடம் அணிந்து உலக சாதனைப் படைத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் நிர்வாகி கூறும்போது,
இந்தியத் தாய்திருநாட்டின் மீது அண்ணல் காநதியடிகள் கொண்டிடருந்த பற்றி, இந்திய மக்களின் மீது கொண்டிருந்த அன்பு, அஹிம்சை முறையில் அவர் நடத்திய அறவழிப் போராட்டம், இன்றும் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் குறிப்பிடப்படும் கத்தியின்றி ரத்தமின்றி, வாங்கப்பட்ட இந்திய சுதந்திரம் என்று எண்ணிலடங்கா அவருடைய நற்செயல்களை மாணவ மாணவிகளின் மனதில் பதிய வைக்கவும், அவருடைய வரலாறு மற்றும் நற்பண்புகளை அனைவரும் பின்பற்றும் நோக்கத்துடன் 520 மாணவ மாணவிகளை அண்ணல் காந்தியடிகளைப் போல் வேடம் அணியச் செய்து இந்த விழாவில் உலக சாதனையைப் படைத்துள்ளோம்.


ஒரே நேரத்தில் 520 பேர் தோன்றி மேடையில் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை தொடர்ச்சியாகப் பாடி உலகிலேயே மிக அதிகமானவர்கள் காந்தியடிகளைப் போல வேடமணிதல் எனும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளோம். இந்த புனிதமான உலக சாதனை நிகழ்விற்காக கடந்த 4 மாத காலம் காந்தியடிகள் பற்றியும் அவர் நம் தேசத்திற்கு ஆற்றிய தொண்டுகளையும் எடுத்துரைத்து, அவர் பின்பற்றிய அஹிம்சை வழியையும் மாணவ மாணவிகளுக்கு உணர்த்தியுள்ளோம்.

அண்ணலின் பண்புகளை உணர்ந்து அவர் கருத்துகளால் ஈர்ப்பு ஏற்பட்ட மாணவ மாணவிகள் 520 பேரில் 58 பேர் அவரைப்போல் தோன்றுவதற்காக உண்மையாகவே தங்களுடைய தலைமுடியைக் காணிக்கையாக்கினார்கள்.

விழாவின் முடிவில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு எலைட் உலக சாதனை நிறுவனம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய 3 உலக சாதனை நிறுவனங்களின் சான்றிதழ்கள் காந்தியடிகள் வேடம் புனைந்த 520 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. உடன் பள்ளியின் சார்பில் அனைவருக்கும் அண்ண-ன் வாழ்க்கை வரலாறு சத்திய சோதனை புத்தகத்தை வழங்கி அதை துணை பாடமாக சேர்க்கப்படவுள்ள தகவலும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது என்றார்.
நன்றி நக்கீரன் 

1 கருத்து: