23 ஜூலை, 2012

பிரணாப் முகர்ஜி, சங்மா...




ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ.சங்மா இந்த வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர், ’’ வழக்கத்துக்கு மாறாக, இந்த தேர்தல் கட்சி சார்புடனும், அரசியல் சார்புடனும் நடந்தது. பொருளாதார சலுகைகள், இதர சலுகைகள் அளிக்கப்பட்டதுடன், அச்சுறுத்தல்களும் விடப்பட்டன.

இந்த தேர்தலை எதிர்த்து நான் கோர்ட்டில் வழக்கு தொடரும் வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை.

பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களைப் போல, ஜனா திபதி தேர்தலுக்கும் நன்னடத்தை விதி முறைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஏற்பட் டுள்ளது. பிரணாப்பின் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம்’’ என்று கூறியுள்ளார்.


குடியரசுத்தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இந்தியாவின் 14வது குடியரசுத் தலை ரானார் மொத்தமுள்ள 10.5 லட்சம் வாக்கில்ஐ.மு.கூட்டணி வேட்பாளர் பிரணாப் 5.58 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். தே.ஜ.கூட்டணி வேட்பாளர் சங்மா 2 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.

மொத்தமுள்ள 763 எம்பிக்களில் பிரணாப்புக்கு 527 எம்பிக்கள் ஆதரவு கிடைத்தது. 206 பேர் பி.ஏ.சங்மாவுக்கு வாக்களித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில், கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 எம்.எல்.ஏ.க்களில் 223 பேர் ஓட்டு போட்டனர். இதில் 3 பேரின் ஓட்டு செல்லாதது ஆகிவிட்டது.

மீதம் உள்ள 220 ஓட்டுகளில் பிரணாப் முகர்ஜிக்கு 117 ஓட்டுகளும், பி.ஏ. சங்மாவுக்கு 103 ஓட்டுகளும் கிடைத் தன. சட்டசபையில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு 119 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆனால் அவர்களில் சிலர் கட்சி மாறி பிரணாப் முகர் ஜிக்கு வாக்கு அளித்ததால் பி.ஏ. சங்மாவுக்கு 103 ஓட்டுகள்தான் கிடைத்தன.

கர்நாடகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 15,327 வாக்கு மதிப்பு களும், பி.ஏ. சங்மாவுக்கு 13,493 வாக்கு மதிப்புகளும் கிடைத்து இருக்கின்றன. 


பிரணாப் முகர்ஜி நேற்று அளித்த பேட்டியில், "எனக்கு, மிக உயர்ந்த பதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு, என் இதயப்பூர்வமான நன்றி. மக்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், பணியைச் செய்வேன். அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி நடப்பேன். நாட்டுக்கு நான் ஆற்றிய பணிகளை விட, நாட்டு மக்கள், எனக்கு மிக அதிகமான பொறுப்புகளை தந்துள்ளனர்' என, தழுதழுத்த குரலில் கூறினார்.
பிரணாப்பை எதிர்த்து போட்டியிட்ட சங்மா கூறுகையில், "வெற்றி பெற்ற பிரணாப்புக்கு, என் வாழ்த்துக்கள். இந்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட விதம், பாரபட்சமாகவும், அரசியல் சார்பானதாகவும் இருந்தது. ஐ.மு., கூட்டணி ஆட்சி நடக்காத மாநிலங்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, அந்த மாநிலங்களுக்கு, சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட்டது. இந்த தேர்தலை எதிர்த்து, நான் கோர்ட்டில் வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது'


ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வை வீழ்த்தி நாட்டின் 13-வது ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மா, தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதோடு, தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரணாப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து சங்மா, ’’வெற்றிபெற்ற பிரணாப்பை நான் வாழ்த்துகிறேன். நாட்டின் பழங்குடியின மக்க ளுக்கும், என்னை வேட்பாளராக முன்னிறுத்திய அ.தி.மு.க, பாரதீய ஜனதா போன்ற கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக நவீன் பட்நாயக், ஜெயலலிதா, அருண் ஜெட்லி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தலில் நான் தோற்றிருந்தாலும், பழங்குடியினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாக அடைய கிடைத்த அரிய வாய்ப்பை நமது நாடு இழந்துள்ளது. அரசியல் பாகுபாடு மற்றும் பாரபட்சங்களால்தான் நான் தோல்வியடைந்தேன்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நடத்தை விதிகள் பலப்படுத் தப்பட வேண்டும். பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலாவது நடத்தை விதிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக