1 ஜூலை, 2012

பரபரப்பான பேச்சுக்கு பெயர் போன சிம்புவின் மன்மதன் 2


திரைவட்டாரத்தில் சமீபத்திய பரபரப்பான பேச்சாக இருப்பது துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிம்புவும், தனுஷும் இணைந்து 
 
’கொலவெறி’பாடல் பாடியது தான். 

தமிழ் சினிமாவில் எதிர் எதிர் துருவங்களாகவே இருந்த இரு நடிகர்கள் திடீரென கட்டிப்பிடித்து மேடையில் பாட்டு பாடவும், அங்கு எழுந்த கைதட்டலில் அரங்கமும் அதிர்ந்தது, இருவரையும் எதிரிகளாக்கியே பேசிக்கொண்டிருந்தவர்களும் அதிர்ந்து போனார்கள்.

வேட்டை மன்னன், வாலு, போடா போடி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு, அடுத்த படத்தை அவரே இயக்கி நடிக்கிறாராம். சிம்புவின் அடுத்த படம் புதுக்கதை இல்லையாம். ஏற்கனவே வெளியான மன்மதன் படத்தின் தொடர்ச்சி தானாம். படத்திற்கான கதை எழுதிக்கொண்டிருக்கும் சிம்பு, இந்த படத்திற்கு ’மன்மதன்-2’ என பெயரிட்டுள்ளார்.

சிம்புவின் முதல்காதல் தோல்வியில் முடிந்தது. மன்மதன் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் சிம்பு தன் முதல் காதல் அனுபவத்தைத் தான் மன்மதன் படமாக எடுத்திருக்கிறார் என பரப்பரப்பாக பேசப்பட்டது. அதற்கு பிறகு சிம்பு நயன்தாராவை காதலித்து, இருவரும் பிரிந்துவிட்டனர். அந்த சமயத்தில் என் இரண்டாவது காதல் அனுபவத்தை படமாக எடுப்பேன் என அறிவித்திருந்தார்.

சிம்புவின் கடைசி காதலியான நயன்தாராவும் தனது இரண்டாவது காதலில் தோல்வியடைந்த பின்னர் தான் சிம்பு இந்த படத்திற்கு கதை எழுத ஆரம்பித்தார். எனவே மன்மதன்-2 ல் சிம்புவின் இரண்டாவது காதலியின் கதாபாத்திரமும் வரலாம் என்பது கோடம்பாக்கத்து செய்தி.

மன்மதன்-2 படத்தின் கதாநாயகியாக அனுஷ்காவை நடிக்க வைத்தே தீருவது என்ற முடிவில் இருக்கிறதாம் சிம்பு தரப்பு. அனுஷ்கா ஏற்கனவே சிம்புவுடன் வானம் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் த்ரிஷா, தமன்னா, சிந்து துல்லானி, மந்திரா பேடி ஆகியோரிடமும் கால்ஷீட் கேட்கவிருக்கிறார்களாம். 

சிம்புவின் நண்பனாக சந்தானம் கதை முழுக்க வலம் வருகிறாராம்.

 பரபரப்பான பேச்சுக்கு பெயர் போன சிம்புவின் மன்மதன் 2,வெற்றிக்கு 
அவர் பங்கும் உழைப்பும் ஒருப்பக்கமும் அடுத்து   கிசுகிசும் கைகொடுக்கும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக