1 ஜூலை, 2012

சிறைக்கு செல்ல தயங்க மாட்டேன்: நடிகை குஷ்பு ஆவேசம்

சென்னை, ஜூலை. 1- 

சிறைக்கு செல்ல தயங்க மாட்டேன்: நடிகை குஷ்பு ஆவேசம் 

திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார்.

தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. விலைவாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பேசினார்.

கூட்டத்தில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் பால், பஸ் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்து கேள்வி கேட்கும் தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள், குண்டர் சட்டங்கள் பாய்கிறது.

இந்திய வரலாற்றில் எத்தனையோ கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்களை, தி.மு.க.வினரை பழிவாங்கும் அரசாகவே செயல்படுவது அ.தி.மு.க. மட்டும்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதைத்தான் செய்தோமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

தி.மு.க.வினரை பழி வாங்குவதிலேயே நேரத்தை போக்கும் அ.தி.மு.க. மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கடத்தல், செயின் பறிப்பு போன்றவை தினமும் நடந்து வருகிறது. இதை காவல்துறை கண்டு கொள்வதில்லை. தி.மு.க.வினர் மீதே காவல் துறைக்கு கவனம் இருக்கிறது.

ஆட்சியில் நடக்கும் தவறுகளை, அராஜக போக்கை நாங்கள் தொடர்ந்து தட்டிக் கேட்போம். இதற்காக நான் சிறைக்கு செல்லவும் தயங்கமாட்டேன். குண்டர் சட்டம் பாய்ந்தாலும், சிறைகள் வீடு தேடி வந்தாலும் நாங்கள் தட்டிக்கேட்பதை நிறுத்தமாட்டோம்.

எத்தனை வழக்குகள் போட்டாலும், அடக்கு முறைகளை கையாண்டாலும் தி.மு.க.வை அழிக்க முடியாது. என்ன முயற்சித்தாலும் எங்கள் ஒற்றுமையை உடைக்கமுடியாது. தி.மு.க.வின் பலத்தை வரும் 4-ந் தேதி பாருங்கள்.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

கூட்டத்தில், பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்....

நல்ல தில் தான் உங்களுக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக