15 ஜூன், 2012

வறுமையின் கொடுமை! பெற்ற குழந்தையை விற்ற அன்னை!



நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ஏற்கனவே 8 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன் சுடலை, கடந்த டிசம்பர் மாதம் செல்வியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த ஜனவரி 8ஆம் தேதி அன்று செல்விக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது.
கூலி வேலை பார்க்கும் தன்னால் மூன்று பெண் குழந்தைகளை வளர்க்க முடியுமா என்று மன உளைச்சலுக்கு ஆளானார். கிடைக்கிற கூலியும் போதவில்லை என்று மனம் வருந்தினார். இந்த விஷயத்தை தன் வீட்டில் அருகில் உள்ள பாத்திமா என்பவரிடம் தெரிவித்துள்ளார் செல்வி.
பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை. இரண்டு பெண் குழந்தைகளையும் விற்றுவிடலாம் என்று பாத்திமாவிடம் தெரிவித்தார். பாத்திமா மேலப்பாளையத்தில் உள்ள குழந்தைகளின் புரோக்கர் சுலேகாவிடம் விஷயத்தை தெரிவித்தார். சுலேகாவும் அதே பகுதியில் உள்ள வேல்சாமி என்பவரிடம் பேசி முதல் பெண் குழந்தையை விற்றுவிட்டார்கள். மற்றொரு குழந்தையை சாம்பவ வடகரையில் உள்ள பொன்னுத்தாயி என்கிற புரோக்கரிடமும், தென்காசி ஹசிங் போர்டு காலணியில் உள்ள முனீஸ்வரன் என்பவர் மூலமாக அடுத்த பெண் குழந்தையையும் விற்றனர்.
இந்த இரண்டு பெண் குழந்தைகளையும் விற்றது மூலமாக செல்விக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை கைமாறியிருக்கிறது. இந்த விபரம் நெல்லையில் உள்ள சரணலாயம் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் என்பவருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர் சுத்தமல்லி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து சுத்தமல்லி போலீசார், விசாரணை நடத்தி விற்கப்பட்ட இரண்டு குழந்தைகளை கைப்பற்றியதோடு செல்வி மற்றும் புரோக்கர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
பெற்ற குழந்தையை தாயே விற்ற கொடுமை, நெல்லையில் பரபரப்பாக்கியுள்ளது.
படங்கள்: ராம்குமா...நன்றி நக்கீரன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக