17 ஜூன், 2012

நான் எப்போதும் கலாமை மதிக்கிறேன்: கருணாநிதி


நான் எப்போதும் கலாமை மதிக்கிறேன்: கருணாநிதி
தலைவர் கருணாநிதி
நேற்று கலாம் என்றால் கலக்கம் என்ற சொன்னார் ஆனால் இன்று 
நான் எப்போதும் கலாமை மதிக்கிறேன்:

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போட்டியிடுவது பற்றி, கடந்த வாரம் கருத்து கூறிய தி.மு.க தலைவர் கருணாநிதி, 'கலாம் என்றால் கலகம் விளைவிப்பவர்’ எனக் கூறியிருந்தார். கருணாநிதியின் இக்கருத்து கடும் விமர்சனத்துக்கு ஆளானது. பல்வேறு அரசியல் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில் அப்துல்கலாமை தான் எப்போதும் மதிப்பதாகக் கருணாநிதி இன்று கூறியுள்ளார். இதுபற்றி பேசிய கருணாநிதி, ‘இந்தப் பிரச்சினையை திசைதிருப்ப சிலர் முயல்கின்றனர். கலாமை நான் எவ்வளவு மதிக்கிறேன் என்பது, அவருக்கே தெரியும். நான் எப்போதும் அவரை மதிப்பேன்’ என்றார்.
 
ஜனாதிபதி தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளது பற்றி பேசும்போது, ‘ஜனாதிபதி தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக பிரணாப் 30-ம் தேதி சென்னை வருகிறார். அவர் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். சென்னை வரும் பிரணாப்புக்கு சிறப்பான வரவேற்பளிக்க ஏர்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரணாப்பின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ என்றார் கருணாநிதி.

நேற்றைய பேச்சுக்கு எதிர்ப்பு வரவே...! தலைவர் பேச்சும் திசை மாறியதோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக