23 ஜூன், 2012

சின்னச்சின்ன கவிதைகள் (எனது 800 வது பதிப்பு )



சேலை கட்டும் சோலைக்குள்
வாசம் கண்டு இன்றோ
நான் அவள் வசம்

சாய்ந்த நிலையில்
கொடி இடை
படர்ந்து ஈர்த்தது

முத்தமிட்ட நேரமெல்லாம்
உன் சிரிப்புதான்
முத்தத்தின் அர்த்தம் சொன்னது

மெல்லிய ரப்பராய்
மொழி பெயர்த்தது
உன் நடன அசைவு

ஆயுதமாய்
உன் இரு
விழிகள்...

மனதை மயக்கும்
மழலை மொழியில்
மங்கை

பூக்களும் சுடுகிறது
என் எண்ணத்தை
புரிந்து...

மலரும் நினைவுகள்
மனதில் வந்து போகும் போது
வாலிபம் திரும்புகிறது...

பூக்கள் தந்த
புதிய
பூவிது

இட கை வல கை இடமாற
இணைத்து நடந்தால்
மனசு தடுமாற...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக