22 ஜூன், 2012

அகிலேஷ் யாதவின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்: முலாயம்சிங்

லக்னோ,ஜூன்.22-அகிலேஷ் யாதவின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்: முலாயம்சிங் 
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்குவதாக அகிலேஷின் தந்தையும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசும்போது, ‘முந்தைய ஆட்சியைப் போல் ஊழல்கள் இல்லாமல், சமாஜ்வாடி ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகின்றன.

மேலும் சட்டம், ஒழுங்கும் கட்டுப்பாடில் உள்ளது. எனவே சமாஜ்வாடி கட்சியின் 100 நாள் ஆட்சிக்கு நான் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்குவேன்’ என முலாயம் கூறியுள்ளார்.

2014-ல் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது பற்றி பேசிய முலாயம், ‘மூன்றாவது அணி பற்றிய முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும்’ என்றார். மேலும் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு தங்கள் கட்சி ஆதரவளிப்பது உறுதி எனவும் முலாயம் கூறினார்.

அரசியலும் ,சினிமாவை போல் நாட்கள் பார்த்து தங்களது சாதனைகளை சொல்லிக்கொள்கிறார்கள்...

இந்த ஆட்சி நூறு நாட்களை கடந்து வெற்றிநடை போடுகிறது எனபது போல 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக