6 ஜூன், 2012

பழமொழிகள்...1


சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...




பழமொழிகள்




அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.


அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.


அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.


அசையாத மணி அடிக்காது


அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.


அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.


அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.


அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.


அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.


அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.


அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து 
இழுத்து விடுவார்கள்.


அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.


அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.


அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.


அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.


அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.


அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.


அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.


அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.


அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.


அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக