கலகங்கள் காட்சியாய்...
சாட்சி சொல்லும்
மனித நேயத்தின்
விழ்ச்சிகளை!
இனம் கண்டு,கொலை.
மதம் பிடித்து ரகளை
செய்தவர்கள் எல்லாம்
இன்னும் இங்கு...
ஏமாற்றமாய் போனதால்
எதிர்ப்புக் கூட
ஒதிங்கிக் கொண்டன
ஏன் வம்பு என்று...
எதிர்ப்புக் காட்ட
போராட்டம் .
போராட்டம் கலவரமாய்
மாறியதில்...
மீண்டும் இங்கு இழப்பு
மனிதனுக்கு மட்டுமே!
எதிர்ப்பும், எதிர்பார்க்கும்,
மனித நேயம் பிறக்காதா என்று !
எதிர்பார்ப்புகளுடன்
இன்னும் அப்பாவி மனிதன்
இன்றும் இங்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக