20 மார்., 2012

உண்மை போதையை அறிவாய்...




குடியை கொண்டு 
குடியை கெடுக்க,
ஒத்திகைப் போராட்டம்!


கஷ்டத்தை மறக்க 
விஷத்தை குடிக்கும்,
குடிமக்கள் இவர்கள்!


இருப்பதை தொலைக்க,
இருந்ததை 
இழக்க
இருப்பதில் 
கொடுத்து வாங்குபவர்கள்!




மனிதன் என்ற பெயரில் 
வாழும் அரக்கர்கள்
இருந்தால் என்ன 
இறந்தால் என்ன !


வாடிகையாளராய் போனதால் 
வாழ்கையை ,ஆரம்பத்திலேயே,
தொலைத்தவர்களே ....!


தற்கொலை வாதிகளே 
அறிந்த்கொளுங்கள்!
வாழ்க்கையின் இன்பம் ,
உன் தாயின் ஆரம்பம்,


பின் நண்பர்களாய் தொடரும்
மனைவியோடு 
சுகமும்,கட்டில் பந்தமும் 
உன்னை வசப்படுத்தும்,
வாழ்கையை வாழ்ந்துப்பார்!


உன் தலைமுறைக்கு 
முகவரியாய் இருந்துப்பார்
உணர்வாய் உயர்வாய்.
உண்மை போதையை அறிவாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக