17 மார்., 2012

திருந்துவார்களா இவர்கள்

 



கைபேசி என்கிற மொபைல்,
கழிவறை இல்லாத வீட்டிலும் கைபேசி உண்டு 
என்ற நிலை இந்தியாவில்...


இதை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கிறது கம்பெனிகள்...
வாடிக்கையாளர்களை மயக்கும் வழிகளில் 
டாக் டைம் முழுமையாய் தருவதும் தினம் ஒரு திட்டம்...
புது வகை வழிகளாய்...


ஆனால் அதுவே வலியாய் வாடிக்கையாளருக்கு...




பல ;லட்சங்கள் கொண்ட வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்கள்...
பல வகையில் ஏமாற்று வழிகளை செய்து வருவது தான் கொடுமை...


உங்களுக்கு விருப்பமான பாடல்களை அழைப்பு மணியாய் ஒலிக்க வாடிக்கையாளர்கள் அனுமதில்லாமலே பணத்தை எடுத்து சேர்ப்பதும்...


செய்திகளை அனுப்பி அதன் மூலம் இருக்கும் பணத்தை கொள்ளை அடிபப்தும் 
தினம் தினம் ஏதோ வகையில் நடந்து வருகிறது...
காரணத்தை  நம்மால் உறுதி படுத்த முடியாத நிலை இவர்களுக்கு ஒரு வகை வசதியாய் போகிறது தான் காரணம்...


இதற்க்கு தீர்வு தான் என்ன ?


திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ,பட்டுக்கோட்டையார் பாட்டு போல தான்....


திருந்துவார்களா இவர்கள் 
அவர்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக