5 ஜன., 2012

நமது பயணம்!


பேருந்து!
நம் வாழ்க்கையோடு
வலம் வரும் உறவு!

அலுவலக அதிகாரிகள் 
மாணவ மாணவிகள் 
இல்லத்தரசிகள்  என

புளிமுட்டையாய் 
திணிக்கப்பட்ட
மனிதர்களின் ஊர்வலம்!

பாதையே இல்லாத ஊருக்கும்
பேருந்துகள் நலம் விசாரித்து
நகர்வலம்...

படிகளில் கூட பயமின்றி
பயணம் செய்கின்ற
இளைய தலைமுறைகள்

வன்முறைக்கு முதல் பலி
பேருந்து தான்
உடைக்கப்படலாம்!
இல்லை
எரிக்கப்படலாம்!

முன்னே போங்க என்று
உலகிலேயே 
வாழ்த்துச்சொல்லும்
நடத்துனர்!

வளைத்து ஒடித்து 
நிறுத்தி ஓட்டிவரும்,
நம் உயிருக்காக்கும்
தோழனாய் ஓட்டுனர்

துருனாற்றம்
வேர்வை நாற்றம்
மத்தில்,
மல்லிகை வாசமும் 
வந்து போகும்!

நெருக்கத்தில் 
ஜாதி, மதம், காணாத
உலகமாய் பேருந்து...

மூச்சுக் காற்றுக் கூட
ஈரத்தை காயவைக்கும் 
வெப்பம் 

சிற்றின்ப கயவர்களின்
மத்தில் 
பெண்களின் நிலை 
தடுமாற்றம்
மனதுக்குள் அனல் கக்கும்
இருப்பினும்
அடக்கி வாசிக்கப்படும்...

இவற்றுக்குள் 
இடையிலோ
திருடர்களின் கைவரிசை

இத்தனைக்கும் 
நடுவில் தான் 
பேருந்தோடு
தினம் தினம் 
நமது பயணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக