31 ஜன., 2012

இயற்கையோடு...










இயற்கை இங்கு
கதிரவனின் 
காதல் கண்டு
சிவந்து விட்டது!

மரத்திற்கும்
மலருக்கும்,
இலவச மின்சாரமாய்,
கதிரவனின் சேவை!

பார்க்கும் கண்கள் எல்லாம்,
மயங்கவைக்கும் அழகு,
இயற்க்கை சொல்லும் பாங்கு!

யார் அங்கே?
கொஞ்சம் எல்லாம் தள்ளி வை...
இயற்கையோடு 
உன் உள்ளத்தை
இணைத்துவை!

இயற்கையோடு 
உன் இருக்கையை 
படுக்கையை
இருக்குமாறு மாற்றிவை!

அவசர உலகத்தில் 
சற்று இளைப்பாற
இயற்கையோடு 
இணைந்துக்கொள்...

உலகத்தின் 
மாசுக்கு விடைக்கொள்
புதிய மரத்தை 
விதைக்க 
கற்றுக்கொள்....

3 கருத்துகள்:

  1. சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் அண்ணே

    பதிலளிநீக்கு
  2. இயற்கை ரசிகனுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. தமிழ்த்தோட்டம் ,நிலாமதி, உங்கள் இருவருக்கும் எனது நன்றி .

    பதிலளிநீக்கு