4 ஜன., 2012

உலகமே கையிருப்பு...




உழைப்பால் 
என் ரேகைகளை
தொலைத்தவன்

நான் இறப்பை 
அறிந்தவன்
நன்கு தெரிந்தவன


மரணத்தை நேசிப்பவன்
பிறப்பு எனபது என் வழி
இறப்பு என் முகவரி...

கணிதமிட்டு வாழ்ந்தாலும்
கணிப்புக்கு 
கட்டுப்படாதவன்...

எதிர்ப்பார்ப்புக்கள்
ஏமாற்றம் தரும் 
ஏழ்மை 
வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே
என் வாழ்வு...

ஆயுளைக் 
கணிக்க ஜோதிடத்தின்
துணை எதற்கு?

உழைக்கத் 
தெரிந்தவனுக்கு
உலகமே கையிருப்பு!

வாழும் வாழ்க்கையில்
போதும் என்ற 
மனம் வந்தால்
கவலை எங்கு இருக்கு ...

இருக்கும் வரை 
மனிதனாக வாழு,
இறந்த பின் 
பேசும் படி செய்திடு...

2 கருத்துகள்: