22 டிச., 2011

மழைத்துளி



சூரியக்காரனை 
மறைத்த வண்ணம் 

மேக தாத்தாக்கள் 
கருத்த முகத்துடன் 
அங்கும் இங்கும் 
அலைபாய 


இடியும் 
மின்னலும் 
கைக்கோர்க்கவே 


பயத்துடன் 
முன் ஜாமீன் 
பெற்ற மக்கள் 
குடைக்குள்ளும் 
வீட்டுக்குள்ளும்...


ரோஜாக்களை 
தழுவிய மகிழ்ச்சியில் 
மரத்திலும் 
மண்ணிலும் 
விழுந்து 
மரணமாகாத 
மறுபிறவியாய்
மழைத்துளி....


உணவாய்
கனியாய் 
கறியாய்
பூவாய் 
நீராய்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக