4 நவ., 2011

நினைவுகளை சுவாசித்து...




வாலிப வயதின்
பெருநாள் என்றால்
மனதுக்குள்
மகிழ்ச்சி வெள்ளோட்டம்.


ஊரெல்லாம்  
கொண்டாட்டம்.

பெருநாள்
முதல் நாள்
மாலை வந்து விட்டால்
மனசுக்குள்
மத்தாப்பாய் சந்தோசம்

மருதாணி இலைக்கு
அலைப் பாயும்
பெண்கள் கூட்டம்.


துணிப்பை நிறைய
மருதாணி இலைகள்
நிரப்பட்டு ஆனதமாய்
நடைப்பழகும்.

இரவு...
தெருவெங்கும்
ஒரு பரபரப்பு

வண்ண விளக்கின்
வெளிச்சம்
தெருவுக்கு 
போர்த்தப்படும்

வண்ணக்கொடிகள் 
பந்தலாய் கட்டப்படும்

ஒலிப் பெருக்கில்
நாகூர் ஹனிபா
பாடிக்கொண்டு இருப்பார் .

பெண்கள் கைகளில்
மருதாணி கோலம்.

தாயிக்கும் மகளுக்கும்
மறுநாள் காலை உணவு
பற்றி 
கருத்துப் பரிமாற்றம்.

எதுவும் அறியாமல்
வரவு சிலவு கணக்கோடு
அப்பாக்கள்.

நாளைய திரைப்படத்துக்கு
போவது பற்றி
வாலிபர்கள் திட்டம்.

இரவு உறங்க சொல்ல
சூரியன் விழித்துக்கொள்ள
பெருநாள்.

புது சட்டை
கைலியோடு இனம்புரியாத
சந்தோஷத்துடன்
தொழுகைக்கு
ஆயத்தம்.



நண்பர்கள் படைச் சூழ
சிரிப்பின் சில்லறைகளை 
முகத்துக்குள் வழங்கப்படும் .

தெருவெங்கும் 
வாலிபக் கன்னிகளின் 
தேரோட்டம்

நேரம் செல்ல செல்ல
பெருநாள் கைவிட்டு
போவது போல...
கவலை மனதுக்குள்.

சூரியன் நிறமாறும்
மாலை நேரம் 

பெருநாள் 
மெல்ல மெல்ல
செல்லுவதை
அறிந்தாலும் 

திரைப்படத்தின் நாட்டம்
கொஞ்சம் மாற்றும்.

பெருநாள்!
இரவோடு செல்ல...

மனமும்
அடுத்த பெருநாளுக்கு
ஏங்க...

வாலிபத்தில் பண்டிகை
கேளிக்கையையும்
மகிழ்ச்சியையும் சார்ந்தே
இருந்தது.

அவசர உலகத்தில்
இந்த நினைவுகளை
சற்று சுவாசித்து

பாலைவனத்திலிருக்கும்
நானும்...
மீண்டும் பார்க்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக