4 நவ., 2011

இவர்கள் குணம் ...




நாட்டை சுத்தம் 
செய்ய திட்டம்.


ஊழலை ஒழிக்க 
உண்ணாவிரதம்.


நன்கொடையாய்
கோடிகள்...


தந்து மகிழும் 
ஆதரவாளர்கள்.


பட்டினி சாவுகளை 
அறியாத அறிவாளிகள்.


இவர்கள் கடந்து போகும் 
சாலையெங்கும் 
அனாதைகள்.


இருந்தும் மறுக்கும் 
மனம் .
வேற எங்கோ கொடுத்து 
உதவ துடிக்கும்.


இவர்கள் குணம்  
ஊழலை ஒழிக்க 
நடத்தும் நாடகம்.

2 கருத்துகள்:

  1. kavithai arumai annaa ...
    yaraith thaan nambuvathu endru thaeriyalai annaa

    பதிலளிநீக்கு
  2. ஏமாற்றும் நபர்கள் ,இருக்கும் வரை ஏமாற்று தொடரும்

    பதிலளிநீக்கு