11 நவ., 2011

சினிமா ஒரு ஆயுதம்





சினிமா ஒரு ஆயுதம் ,மறுப்பதற்கு இல்லை! நாற்பது வருடமாய் 
ஆட்சியில் இருந்து வருகிறது.


சினிமா நன்றி மறந்த கூட்டம்.பொயில்லை .இருக்கும் வரை 
ஜால்ராக்கள் போட்டு துதிப்பாடும்,மார்க்கெட் போனால் கேட் அவுட் சொல்லும்.


நேற்றைய  ஆட்சிக்கு ஒரு கூட்டம்,இன்றைய ஆட்சிக்கு ஒரு கூட்டம் -ஆதரவு 
அளிக்கும்.இங்கு பவர் இருக்கும் வரை மின்சாரம்.


பவர் போனால் காரசாரம் விவாதம்.அப்பப்ப நடக்கும் சங்கத்தின்   கூட்டமும் 
துதிப்பாடும் ,அன்றைய  ஆட்சிக்கு தலை வணக்கும்.


கவர்ச்சியே  சினிமாவின்  ஆயுதம்.கதாநாயகர்களுக்கு ,மார்கெட் கவர்ச்சி .
நாயகிகளுக்கு ஆடை குறைப்பு கவர்ச்சி...


பொது கூட்டத்துக்கு நாயகிகள் தொடை தெரிய வரக்கூடாதாம்,சொல்கிறார்கள்,
சினிமாக்காரர்கள்..படத்தில் பார்த்தால் ஆடைக்கு விடை சொல்கிறார்கள்,


கதைக்கு வேண்டிய காட்சியாம்.முத்தக்காட்சிகள்,கற்பழிப்பு காட்சிகள்,காதல் காட்சிகள் என்று வகைப்படுத்தினால் 


இவர்களின் இரட்டை வேடம் தெரிந்து போகும்.சினமா ஆயுதம் தான் 
இவர்கள் அதை கவர்ச்சிக்கும்,புகழுக்கும்,பயன் படுத்துகிறார்கள்,


இன்று ஆட்சிக்கு வரவும் தூது சொல்கிறார்கள்.யாரப்பா அது முதலில் தனி மனிதன் வழிபாடுகளை அறுத்து எறியுங்கள்.


பஞ்ச் வசனத்தை,ஜால்ரா போடுவதை ஒதுக்குங்கள்.கவர்ச்சி சினிமாவை அழிக்க
பிடிவாதம் என்னும்  ஆயுதம் எடுங்கள்.


பத்து பேரை அடிக்கும் 
நாயகன்.
முந்தானைல்லாத 
நடிகை
காதலுக்கும் இங்கு 
கவர்ச்சி
சொல்லித்தரும் 
காட்சி.
சினிமாவின் 
வளர்ச்சி...


மறுப்போம்.பார்க்க மறுப்போம் கலாச்சாரத்தை மீறும் படங்களை.
கவர்ச்சி என்று அரை நிவாரண படத்தை,தனி மனிதன் புகழ் பாடுதலை.


பார்க்க மாட்டோம் என்ற பிடிவாத ஆயுதத்தை எடுப்போம்.
நாளைய சமுதாயம் காப்போம்.


பார்வைகள் தொடரும்...


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

4 கருத்துகள்:

  1. பார்க்க மாட்டோம் என்ற பிடிவாத ஆயுதத்தை எடுப்போம்.நாளைய சமுதாயம் காப்போம்.
    --- உறுதி எடுப்போம் அண்ணா .... இன்றைய சூழ்நிலையில் தொலைகாட்சி இல்லாத வீடு இன்று எதுவும் இல்லை என்ற சொல்லலாம் அண்ணா ...
    பிஞ்சு குழந்தைகளுக்கு சினிமா படலை கற்றுக் கொடுத்து அதை பிஞ்சு மொழியில் கேட்டு ரசிக்கும் வர்க்கம் ஆகிப் போனேம் அண்ணா ...இந்த நிலை மாறுமான்னு தெரியல... அட்லீஸ்ட் நாம நம் வீட்டையாவது மாற்ற முயற்சி செய்யலாம் அண்ணா ....

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்து உண்மையே .நன்மை மாற்றுவோம் முதலில்.........நன்றி தங்கையே..

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12 நவ., 2011, AM 11:33:00

    உண்மையான வரிகள் .மகி

    பதிலளிநீக்கு
  4. நன்றி மகி. உங்கள் வருகைக்கு கருத்துக்கு .

    பதிலளிநீக்கு