14 அக்., 2011

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்!












ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,
விஞ்ஞான உலகத்தின் புரட்சியாளன்.
புதுமைக்கு இவரோ படைப்பாளன்.

இன்றைய தலைமுறைக்கு வழியானவர்
புதிய படைப்புக்கு விழியானவர்
தமிழனுக்கு விலாசமானவர்.


பப்பாளி,அவரை என்று,
புதிய விளைச்சலை பெற,

விதைக்க தந்தார் புதிய விதை.
எல்லாம் அறிந்த இவரை
 நாம் இன்னும்
 புரிந்துக்கொள்ளவில்லை.

விஞ்ஞான மேதை என்னும் விலாசம்
இந்தியன் என்பதால், அங்கீகாரம் தர,
உலக அரங்கில் மனமில்லையோ?


தமிழனுக்கே உண்டான சாபக்கேடு,
தரமிருந்தும்,ஏற்க மனமில்லை
தரமில்லாத பொருளுக்கு   இங்கு
மதிப்பு குறைவில்லை.

2 கருத்துகள்: