16 நவ., 2014

நம் உறவுகளில் ஒன்று!

பேருந்து!
நம் வாழ்க்கையோடு 
வலம் வரும் உறவு!
புளிமுட்டையாய் திணிக்கப்பட்ட 
மனிதர்களின் ஊர்வலம்!
பாதையே இல்லாத ஊருக்கும் 
பேருந்துகள் நலம் விசாரித்து 
வருகிறது!
படிகளில் கூட பயமின்றி 
பயணம் செய்கின்ற
இளைய தலைமுறைகள்!
வன்முறைக்கு முதல் பலி 
பேருந்து தான்!
உடைக்கப்படலாம்!இல்லை 
எரிக்கப்படலாம்!
முன்னே போங்க 
என்று 

உலகிலேயே வாழ்த்துச்சொல்லும் 
நடத்துனர்!
கதாநாயனாக எண்ணத்தில் 
வளைத்து, நிறுத்தி ,ஓட்டிவரும்,
நம் உயிருக்காக்கும் 
தோழனாய் ஓட்டுனர்!
துருனாற்றம்,வேர்வை நாற்றம்,மத்தில்,
மல்லிகை வாசமும் வந்து போகும்!
நெருக்கத்தில் ஜாதி, மதம், காணாத 
உலகம் பேருந்து மட்டுமே!
மூச்சுக் காற்றுக் கூட 
ஈரத்தை காயவைக்கும் வெப்பம் 
இருக்கும்!
சிற்றின்ப கயவர்களின் 
மத்தில் பெண்களின் 
நிலை தடுமாற்றமாகவே இருக்கும்!
மனதுக்குள் அனல்க் கக்கும்!
அடக்கி வச்சிக்கப்படும்!
திருடர்களின்
 
கைவரிசை 
நடந்த வண்ணமாக இருக்கும்!
இத்தனைக்கும் நடுவில் தான் 
தினம் நமது பயணம்!
பேருந்து 
நம் உறவுகளில் ஒன்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக