17 மே, 2013

போதைச் சேற்றில் மனித நாற்றுகள்



கோயில் பக்கமும் 
பள்ளிகள் பக்கமும் 
அக்கம்பக்கமாய் 
டாஸ் மார்க் கடைகள்...

தடுமாறும் நடையில் 
நாளைய தலைமுறைகள் 
போதையோடு 
நிர்வாணமாய் 
முதிர்ந்த வயதினர்கள்...

தெளித்து விடப்பட்ட
போதை நீரில் 
வளரும் பயிர்கள் 
வாடிப்போக...

போலிகள் என்றாலும் 
சரி 
போதை வேண்டும் 
என்ற நெறி...

சிலர்  பூட்டு போடா 
போராட்ட்டம்...
இரவு நேரத்தில் 
போதையோடு 
நடமாட்டம்...

போதையோடு 
நகரும் நகரம்
நாடகமாய் போனது 
உலகம்...

தவறாய் போன நிலையில் 
மறக்க குடிகிறேன் 
போதை தேடி 
குடி மகன் சொன்னான் 
சிரித்தபடி...

குடலும் வெந்தப்படி 
குடிக்கும் குடி 
இவன் அறிந்த படி 
குடிக்கும் குடியடி 
இவனை என்ன 
சொல்லுவதடி...?






1 கருத்து: