12 டிச., 2012

ஞாபகங்கள்...




ஞாபகத்திற்கு  மட்டும் 
மறதியும் பொய்யும் 
தெரியாது...


ஞாபகங்கள்
சொன்னது நேற்றைய 
நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன்...

என்னை கண்டு 

ஒழிந்துக்கொண்ட 
நபரை பார்த்தவுடன் 
ஞாபகங்கள் சொன்னது 
பழைய உறவுகளை...

அழியாத 

சுவடுகளாய் 
ஞாபகங்கள் தொடரும் வண்ணமாய் 
இன்னும் மனதில்...

இன்பமும் துன்பமும் 
இணைந்த 
இரு கோடுகளாய்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக