1 அக்., 2012

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மேலும் ஒரு வழக்கில் கைது

ஓசூர்,அக்.1-குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மேலும் ஒரு வழக்கில் கைது
பெரியார். தி.க. பிரமுகர் பழனி கொலை வழக்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்,அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் லகுமய்யா உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் அனுமதி இல்லாமல் கிரானைட் வெட்டி எடுத்த வழக்கு, அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்கிய வழக்கு உள்பட அடுத்தடுத்து பல வழக்குகள் ராமச்சந்திரன். வரதராஜன், லகுமய்யா ஆகியோர் மீது பாய்ந்தன. இதனால் இவர்கள் 3 பேரும் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேர் மீதும் மேலும் ஒரு வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் செயலாளரும், தற்போதைய அ.தி.மு.க. பிரமுகருமான நாகராஜரெட்டி என்பவர் கடந்த மே மாதம் 16-ந் தேதி தளி அருகே நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து தாக்கப்பட்ட வழக்கில் இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரும் இன்று காலை 10-25 மணிக்கு சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். நாகராஜரெட்டி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே குட்டிநாகா, முனிராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக