11 செப்., 2012

கந்தக மழையில்...


கந்தகத்தோடு 
ஏன் தீக்கு 
உடன்பாடு ....!

தொட்டவுடன் 
கோர தாண்டவத்தில் 
சிதறியது 
உடல்கள்...!

மரணத்தின் ஓலங்கள் 
ஒவ்வொரு வருடமும் 
இன்னும் பாதுகாப்பு 
தான் திட்டமிடப்படுகிறது...!
காலம் கடந்தால் 
மறக்கப்படுகிறது 

நிதி உதவிகள் 
இறந்த பின் கிடைத்தால் என்ன 
கிடைக்காமல் போனால் என்ன 

தேவை 
அச்சம் தீர்க்கும் நிலை 
வேலைக்கு உண்டான 
சம்பளம்...

மரணத்தின் பயம் 
போக்கும் நிலை 
போகுமா
போக்குமா...?

விடை தெரியாமல் 
கந்தக மழையில் 
நனைந்தப்படியே 
ஏழைகள்...!

2 கருத்துகள்:

  1. /// நிதி உதவிகள்
    இறந்த பின் கிடைத்தால் என்ன
    கிடைக்காமல் போனால் என்ன ///

    உண்மை வரிகள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு...

    பதிலளிநீக்கு