24 செப்., 2012

மின்சாரமே உனக்கு கண்ணீர் அஞ்சலி!









கடந்த ஒரு மாதங்களாக தமிழகம் எங்கும் சில மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் காலண்டுத் தேர்வுகளுக்கு படிக்க முடியவில்லை. தொழில் நிறுவனங்களில் தொழில் செய்ய முடியவில்லை. பொதுமக்கள் இரவு பக-ல் தூங்க முடியவில்லை.

இந்த நிலையில் இப்போது மின் வெட்டு நேரம் இன்னும் அதிகமாகி உள்ளது. டெல்டா பகுதியில் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து 10 மணி நேரம் வரை கொடுத்தது. ஆனால் விவசாயம் தொடங்கும் இந்த நேரத்தில் 2 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கொடுக்கப்படுவதால் டெல்டா விவசாயிகள் பாவிய நாற்றை நடவு செய்ய தயங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு பரபரப்பு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தொழில் போச்சு.. தூக்கம் போச்சு.. சென்னையில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அறந்தையில் 12 மணி நேரமா? என்று கேள்வியுடன் அறந்தாங்கி மண்டல போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சங்கம் இந்த போஸ்ட்டரை ஒட்டியுள்ளது. இவர்களே நாளை செவ்வாய் கிழமை உண்ணாவிரத போராட்டமும் அறிவித்துள்ளன...
நன்றி நக்கீரன் 

1 கருத்து:

  1. மிகுந்த சிரமம் சார்...

    மற்ற பத்து பகிர்வையும் Reader-ல் படித்தேன்... காரணம் மி ன் சா ர ம். . . தான்...

    நன்றி...

    பதிலளிநீக்கு