1 செப்., 2012

சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டிய பாலத்தில் ஆபத்தான ஓட்டை

















கீரமங்கலம் வடக்கு நகரம் சன்னதியில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டிய பாலத்தில் ஆபத்தான ஓட்டை ஏற்பட்டுள்ளது.

கீரமங்கலத்தில் இருந்து நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் செல்லும் சாலை பட்டுக்கோட்டை சாலையில் இருந்து நகரம் சன்னதி என்ற இடத்தில் பிரிகிறது. இந்த பிரிவு சாலையில் குறுகிய பாலம் இருந்தது. அதனால் பல விபத்துகள் நடந்தது. வாகன போக்குவரத்தும் அதிகமானதால் நகரம் பிரிவு சாலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிய பாலம் அமைக்கப்பட்டது. அதனால் அந்த இடத்தில் சாலை அகலமாக உள்ளது. எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்ல வசதியாக உள்ளது.

இந்த பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில இடங்களில் சிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சில நாட்களாக கன மழையும் பெய்துள்ளது. மழை பெய்த பிறகு அந்த வழியாக சென்ற வாகனங்களின் எடை தாங்காமல் பாலத்தின் மைய பகுதியில் 2 அடி சுற்றளவிற்கு பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதே போல அதற்கு எதிரில் ஒரு இடத்திலும் ஓட்டை விழும் நிலையில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் பெரிய ஓட்டை விழும் வாய்ப்பு உள்ளது.



இந்த வழியாக சைக்கிள், மோட்டார் சைக்கிள், மற்றும் நடந்து வருபவர்கள் எதிரில் வரும் வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கும் போதும் இரவு நேரங்களிலும் இந்த பெரிய ஓட்டையில் விழும் அபாயம் உள்ளது. ஆகவே இந்த ஓட்டையை உடனே சரி செய்வதுடன் மீண்டும் இது போல ஓட்டைகள் ஏற்படாமல் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக