19 ஆக., 2012

சிறையிலிருந்து தப்பியவர்களை இலங்கைக்கு அனுப்பினேன்: வைகோ ஒப்புதல் வாக்குமூலம்

 

புதுக்கோட்டை: "வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன்,'' என வைகோ பேசினார்.
கடந்த, 1995ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி, அதன் மூலமாக சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே, அடுத்த சில நாட்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்; மீதமுள்ளவர்கள் போலீசில் பிடிபடவில்லை. இந்நிலையில், புதுக்கோட்டையில் நேற்று முன்தினம், வைகோ பேசுகையில், ""வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன்,'' எனக் கூறினார்.
சிறையில் இருந்து தப்பிய புலிகளை, இலங்கைக்கு தான் அனுப்பி வைத்ததாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து தப்பிய கைதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதே குற்றம் எனும் நிலையில், அவர்களை வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியதும், அதை வெளிப்படையாக, வைகோ பெருமிதமாகத் தெரிவித்திருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக