7 ஜூலை, 2012

செக்ஸ் புகார் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி பிரமாண பத்திரம்

புதுடெல்லி, ஜூலை.7- 

செக்ஸ் புகார் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி பிரமாண பத்திரம் 

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே. இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது செக்ஸ் புகார் கூறி உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பெண்ணையும், அவளது பெற்றோரையும் ராகுல் காந்தி சட்ட விரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக அதில் அவர் கூறி இருந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கிஷோர் சம்ரிதேவுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. அத்துடன் கிஷோர் சம்ரிதே மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவில் தனது புகார் மீது ஐகோர்ட்டு உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறி இருந்தார். அவரது அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், டி.எஸ்.தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்தி, உத்தரபிரதேச அரசு மற்றும் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் ராகுல் காந்தியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், தன் மீது மனுதாரர் கூறியுள்ள புகார் முற்றிலும் தவறானது மட்டுமின்றி கெட்ட நோக்கம் கொண்டது என்றும், தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புகார் கூறப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

நன்றி மாலைமலர் ...

இது ஒரு தவறனா செய்தியை இருக்கும் பச்சத்தில் வழக்கு தொடர்ந்த 
நபருக்கு கடுமையான தண்டனை தரனும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக