9 ஜூலை, 2012

காதல் படுத்தும் பாடு....

திருவட்டார், ஜூலை. 8-
திருமண ஆசை காட்டி செக்ஸ்:  காதலன் வீடு முன்பு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட கல்லூரி மாணவி 
மேல்புறத்தை சேர்ந்ததவர் கலைராஜ். இவரது மகள் அனிதா (வயது 21). மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பிளஸ்-1 படித்த போது அதே பகுதியை சேர்ந்த சாஜன் (25) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது பெற் றோருக்கு தெரியாமல் பல இடங்களுக்கும் சென்று வந்தனர்.

இந்த நிலையில் சாஜனுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. இதனால் அவர் வெளியூர் சென்று விட்டார். விடுமுறையில் ஊருக்கு வரும் போதெல்லாம் காதலி அனிதாவை சந்தித்து பேசுவார். அப்போது அடுத்த முறை ஊருக்கு வரும்போது திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுவார். அதன்பின்பு அனிதாவிடம் சொல்லாமல் வேலைக்கு சென்று விடுவார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாஜன் மீண்டும் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது காதலி அனிதாவை சந்தித்து சமரசம் செய்தார். இம்முறை எப்படியும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதை நம்பிய அனிதா நேற்று முன்தினம் சாஜனுடன் வெளியே சென்றார். அவர் அனிதாவை அழைத்துக் கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றார்.

இருவரும் அங்கு உல்லாசமாக இருந்தனர். பின்னர் மீண்டும் அனிதாவை அழைத்துக் கொண்டு மேல்புறம் திரும்பினார். மார்தாண்டம் பஸ் நிலையத்தில் அவரை இறக்கி விட்டபோது அங்கு நின்ற அனிதாவின் பெற்றோர் அவரை பார்த்துவிட்டனர். மகள் காதலனுடன் ஊர் சுற்றி வந்ததை அறிந்த அனிதாவின் தந்தை கலைராஜன் இதுபற்றி இருவரையும் பிடித்து சத்தம் போட்டதோடு இப்பிரச்சினை பற்றி அருமனை போலீசிலும் புகார் செய்தார்.

போலீசார் சாஜனின் பெற்றோர் மற்றும் உறவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நேற்று அனிதாவுக்கும் சாஜனுக்கும் நிச்சயதார்த்தம் நடத்துவது என்றும், திருமணத்தை சில மாதங்கள் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று அனிதா வீட்டில் திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் நேற்று மாலை வரை மாப்பிள்ளை சாஜன் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. சந்தேகம் அடைந்த அனிதாவின் பெற்றோர் சாஜன் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது சாஜனும் அவரது பெற்றோரும் தலைமறைவானது தெரிய வந்தது.

இதுபற்றி அறிந்ததும் அனிதா அதிர்ச்சி அடைந்தார். திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றிய சாஜனை தேடி அவரது வீட்டுக்கு வந்தார். அங்கு திடீர் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் அனிதாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் திடீர் என நடத்திய போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கடம்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் அனிதாவின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தனர். ஆனால் சாஜன் வீட்டார் அங்கு வராததால் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. விடிய விடிய நடந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது.

இன்று மாலைக்குள் இப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண அப்பகுதி பிரமுகர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட அனிதாவிடம் கேட்டபோது என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சாஜன் ஜாலியாக இருந்தார். இப்போது திருமணத்திற்கு மறுக்கிறார். எனக்கு நீதி கிடைக்கும் வரை, சாஜனை மணமுடிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றார்.
நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக