2 ஜூலை, 2012

ஹெல்மெட் கொள்ளையரிடம் போராடிய தாய், மகள்

திருவான்மியூர், ஜூலை. 1-
கத்தி முனையில் 15 பவுன் நகை பறிப்பு: ஹெல்மெட் கொள்ளையரிடம் 
போராடிய தாய், மகள் 
திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் சாலையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் வசந்தி (24) சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது தாயார் சாவித்திரி (54). மதுரை டி.வி.எஸ். நகரில் வசிக்கிறார். உறவினர் திருமண விழாவில் பங்கேற்க சாவித்திரி சென்னை வந்தார். திருமணம் முடிந்து திருவான்மியூரில் உள்ள மகள் வீட்டில் தங்கினார்.

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சூரிய உதயம் பார்க்க சாவித்திரி மகள் வசந்தியுடன் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் சாவித்திரி அணிந்து இருந்த 15 பவுன் நகையை பறிக்க முயன்றனர். நகை கெட்டியாக இருந்ததால் சீக்கிரம் அறுபடவில்லை. சுதாகரித்துக்கொண்ட சாவித்திரி நகையை ஒரு கையால் பிடித்தபடி கொள்ளையர்களுடன் போராடினார். வசந்தியும் கொள்ளையனை தாக்கி கூச்சல் போட்டாள்.

உடனே கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர்களை கீழே தள்ளினர். இதனால் தாய், மகள் பயந்தனர். உடனே 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். இது குறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவான்மியூரில் மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறிக்கும் சம்பவம் தொடர் கதையாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக