18 ஜூன், 2012

என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....



நான் எழுதிய கவிதைக்கு 
கருவாகி
இன்று தோழனாய் 
உருமாறி
இருபத்திரண்டு வயதை 
தொட்ட எனது 
மகனே...!

வாழ்த்தட்டும் காற்றும் 
நாளை நீ காட்டும் 
திசையும் வாழட்டும்...

வாழ்த்தட்டும் பூக்களும் 
நாளை உன் விரல்கள் 
இல்லாமையை 
போக்க உதவட்டும்....

வாழ்த்தட்டும் 
நல்லோர் உள்ளம் 
போற்றட்டும்
நண்பர்கள் உள்ளம்...

தீமை அகற்ற 
தீயாய் உன் எண்ணம் 
எரியட்டும்...
எட்டு திசையெங்கும் 
ஈகை வளர 
உன் கரங்கள் துடிக்கட்டும் 

என்றும் இனிமையாய் 
இனிதே வாழ்க நலமாய் 
எனது இனிய பிறந்த நாள் 
நல்  வாழ்த்துக்கள்....


2 கருத்துகள்:

  1. எண்ணிய எல்லாம் ஈடேறப் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    கவிதை அருமை கலைநிலா.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழியே

    பதிலளிநீக்கு