14 மார்., 2012

உனக்காக துடிக்கிறேன்!

 

விடிந்தது உலகம் என கொண்டேன்-விரலை
விரித்து எழுந்த சூரியனை கண்டு!
வீதியில் பார்த்தேன் விடியவில்லை-விழுந்த
வேட்டியை மறந்த மனிதனை கண்டு!

மது ஒன்று போதும் என்று-தினம்
மறவாமல் குடிப்பது உன் எண்ணம்!
மதுவோடு உன் உடலும் கரைவது.-கண்டு
மனம் கொதிக்கிறது தினம், தினம்!

நீ யாரோ நான் அறியவில்லை-நீ
நினைவின்றி காணும் போது பதறுகிறேன்!
நீ விடியலை தேடாமல் குடிப்பதை கண்டு -கண்களில்
நீர் வடிக்கிறேன் !உனக்காக துடிக்கிறேன்!

உன் சக மனிதனாய்...
உன் சகோதரனாய்...
உன் விடியலுக்கு ஏங்குகிறேன் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக