24 டிச., 2011

கூந்தல் தந்த துளிப்பாக்கள்!



கார்மேகம் 
இந்த பெண்ணோடு
உறவாடுதா இல்லை
இடையோடு 
கொஞ்சிப்பேசுகிறதா
================================

காரிகை 
காற்றில் சிரித்து
உன்னை 
உரசிப்பார்க்கும்போது
பொறாமை தான் எனக்கு.

============================

கார்குழலை 
பெண்ணின்
தலைக்கு கிரீடமாய்
வைத்துப்போனவர் யார் ?

============================

ஒரு கருப்பு 
நீர்விழ்ச்சி,
காற்றில் 
கவிப்பாடியதை
இன்று தான் பார்க்கிறேன்.

=============================

காற்றே என்னவளின்
கருப்புக் கவிதைகளை
கலைத்து விடாதே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக