30 டிச., 2011

போலிச்சாயம் பூசி...





என் பெயர் ஜனநாயகம்...
தெருக்கோடியில் 
கொடிகள் ஏற்றி 
தன்னை அடையாளமிட்டு 

வேட்பாளராய் நின்று
வெற்றி பெற்றேன்,
நானும் கோடியில் வளர.

படிக்காமலே
நானும் கல்லுரி கட்டினேன்
கல்வியை 

வியாபாரமாக நினைத்து.

மருத்துவம் படித்தேன்
மருத்துவம் 

செய்து பணத்தை
கொள்ளை அடிக்க...

அதிகாரத்தை 

துஷ்பிரயோகம் செய்து 
என் இஷ்டப்படி 
சட்டத்தையே 
வளைத்தேன் 

லஞ்சமே 

என் மூலதனம்,
வாங்குவது 

மட்டும் சட்டமாகும்.

மந்திரிகளுக்கும்

பணக்கார ஜாதிகளுக்கும்,
நான் அடிமை....
இருப்பிலும் 

நான் சொல்லுவேன்...

இது தான் 

ஜனநாயகம் என்று
போலிச்சாயம்
பூசி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக