22 நவ., 2011

காலை நேரக்கவிதை...



காலைநேரக் காபியும்
தினசரி பத்திரிக்கையும்
நடுத்தரவாதிகளுக்கு.

பசிப்போக்கும் கஞ்சியும்,
அசதியை போக்க காரமும்
ஏழைகளுக்கு!

தூக்கம் சோம்பல் 
முறித்தாலும்
பெட் காபி மணம் 
வரும் வரைக்கும்,
தூக்கமே உயர்(ந்த) ஜாதிக்கு!

காலை என்பது 
இன்றைய தொடக்கம்,
தொடக்கத்தை வேகமாக்கினால்
இன்றைய தினம்
வலுப்பெறும்!

இது நமக்கு !
================ 


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்: