1 நவ., 2011

இன்னும் இங்கு ....



வாழ்ந்த நிலை அறிய 
கரைந்துப்போன 

சேமித்த  நிமிடங்களை 
நிறுத்திப் பார்த்தேன் 

தூக்கத்தோடு 
சில மணித்துளிகள்

திரை அரங்கத்தில் 
சில மணித்துளிகள்,

சில்லறையாய் 
சிதறிய நிலையில்...

வாழ்க்கையில் கால் பகுதி 
சிலவான நிலை.

மீண்டும் கணக்கில் 
பள்ளி கூடத்திலும்...

நண்பர்களுடனும் கழிப்பட்ட
நேரத்தை பார்த்தால்...

பகல் நிலவாய் நிலையில் 
பாதி வாழ்க்கை போய்விட்டது.


உழைக்க வந்து  வருடங்கள் 
பல ஓடிவிட்டது.

வாழ்க்கையை பார்த்தேன் 
நரை தான் மிச்சம் என்றது.

நானும் சொல்கிறேன் 
வாழ்கிறேன் என்று 

கூட்டி கழித்து பார்த்தால் 
காணமல் போன வாழக்கை 

எங்கே என்று தேடுகிறது....
எள்ளி நகைக்கிறது 

இன்பமுமில்லாமல் 
இறப்புகளுக்கு கூட போகாமல்

சுப காரியத்திலும் 
சுவாசிக்காமல்....

சீய் என்னடா வாழ்க்கை 
எனது உள்ளம் கேட்க...

சொரனையற்ற நிலையில் 
சிந்திக்க மறந்து 

சிரிப்புடன் நான் 
இன்னும் இங்கு ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக