1 நவ., 2011

நம்பி வாழ்ந்தால் ...


நீ திருந்தாத நிலை 
தந்தை பார்த்து 
திட்டினால் உடனே தூக்கு...

தேர்வில் தோல்வி 
மலையிருந்து குதித்து   பலி 


காதல் தோல்வியால்  தற்கொலை
காதல் மட்டுமா  வாழ்க்கை

வாழ்கையை உணராமல்,
வாழ மறுக்கும் கோழைகள்.

இன்பத்தை எதிர்பார்த்து,
துன்பத்தை தாங்கிக்கொள்ள
விரும்பாதவர்கள் நீங்கள்.

இரு கைகள் இருக்கையில்,
உனக்கு என்ன பயம்.


இறைவன் இருக்கையில்
உனக்கு என்ன அவசரம்.

மரணம் வரும் வரை 
வாழ்ந்துப்  பார்ப்பது பெருமை 

நம்பிக்கை 
துரத்தும் தற்கொலை 
நம்பி வாழ்ந்தால்  தோல்வியில்லை.

இருக்கும் வரை உழைத்து வாழ்ந்தால்
உலகம் வாழ்த்தும் உன்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக