17 அக்., 2011

ஊனம் ஊமையாய் போனது!



ஊனம் இவரை பார்த்து 
ஊமையாய் போனது!
கால்கள் இல்லையென்றாலும்,
இருக் கைகள், கைக் கொடுக்கவே  
தன்னம்பிக்கை தலையாட்டுகிறது!

இவரோடு வாழவேண்டும் 
இருக்கும் வரை இருக்க வேண்டும் 
என்று நம்பிக்கை அடம்பிடிக்கிறது!

கண்ணீரோடும் , வாழ்க்கையோடும்,
இவர் போட்ட எதிர் நிச்சல் கண்டு,
ஊனம் ஓடி ஒழிய 
குறித்த நாட்கள் கூட
கூனி குறுகிப்போனது!

2 கருத்துகள்:

  1. நெஞ்சை உருக்கும் கவிதை....
    தொடர்ந்து எழுதுங்கள்......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு