24 அக்., 2011

மானுடம் பிறக்க ...


உறக்கம் துறந்த மக்கள் !
யார் ஆண்டால் என்ன, என்ற எண்ணத்தில்
தனது வேலைகளை செய்கிற நிலையில்...

தேர்தல் நேரத்தில் மட்டுமே
இந்தியன் என்ற எண்ணத்தில்
ஒட்டு போடும் மனிதர்கள்.

பந்தம், பாசம் மறந்து,
பணம் தின்னும் கழுகாய்,
ஓடி ஓடி உழைக்கும் இயந்திரமாய்....

மனிதர் என்ற போர்வையில்
மானுடம் மறந்த வாழ்க்கையோடு
நிம்மதியை தொலைத்த நிலையில்...


யாருக்காக இந்த ஓட்டம்?
வாட்டத்தோடு ஏன் ஓட்டம்?
விடை தெரியாமலே இன்னும் ...

இனியாவது....பிறக்கும் ஆண்டியில்,
இல்லத்தில் இன்பம் பொங்க...
மனிதர்களாய் வாழட்டும் 

வாழ்த்துவோம் !மானுடம் பிறக்க...
வாழ்த்துவோம் !மனிதர்களாய் வாழ!
இதில் நாமும் சேர்ந்து வாழ்வோம்!

2 கருத்துகள்: