19 அக்., 2011

உண்மை நிலை ...


வேலையில்லை என்று 
வேலையை தேடி 
வெளிநாடு வந்தேன்!

வாலிபமும், தன்மானமும் ,
விற்று வருமானம் எடுத்தேன்.

வேலையென்பது எங்குமிருக்கு 
அது இப்படியுமிருக்கு என
விற்பனை செய்கின்ற
வண்டியைப் பார்த்து...
எனது நிலையை நினைத்து
வேதனை கொண்டேன்!

விரல்கள் மூலதனம்,
முயற்சிக்கொண்டால்
நாம்  வெற்றிப்பெறலாம்!

அது உன் அருகில்
நீ  இருப்பதை அறிந்தால் 
வருங்காலம் நமக்கலாம்!


இந்த படம் சொல்லும்
உண்மை நிலை, நாமறிய 
உதவும்!

2 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான கவிதை.......
    தொடர்ந்து எழுதுங்கள்.......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  2. கண்ணன் உங்கள் மறுமொழிக்கு நன்றி
    உங்கள் ஊக்கமே எனது ஆக்கம் .

    பதிலளிநீக்கு