18 அக்., 2011

மம்மி என்றால் பிணம்!




அம்மா என்றால் உறவுக்கும்
உணர்வுக்கும் ,அர்த்தம் புரியும்.
மம்மி என்று சொன்னால்
பிணத்தை அல்லவா குறிக்கும்!

தாய்மொழிக்கு
நன்றிக் கடன் தமிழில் பேசுவது !
அந்நிய நாட்டியில் வாங்கும்
கடன் போல...
பேசும்போது 
வார்த்தைகளும் 
அந்நிய மொழியில் 
கடன் வாங்கப்படுகிறது 

கடன் நடப்பை முறிக்கும்,
அந்நிய மொழியோ உன்
தாய்மொழியை மறக்க செய்யும்.

கற்பது தவறில்லை
கற்றாலும் தமிழ் மொழியில்
பேசுவதில் குற்றமில்லை!


மம்மி என்றால் பிணம்!
அம்மா என்றால் பாசம்!
சொல்லிப்பழகு உனக்கு புரியும்.
தமிழை புரிந்துக்கொள்!
பேசிப் பழகிக்கொள்!

2 கருத்துகள்:

  1. உங்களின் சமூக கவிதை மிகவும் அருமை.......
    தொடர்ந்து எழுதுங்கள்.......


    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி .
    உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு