21 செப்., 2011

அண்ணா துரை!


மறைந்து போனா
அண்ணா துரை,
இன்று மட்டும் கழகங்களுக்கு,
மறுபிறப்பு!

கல்லறைகள்,சீரமைக்கப்பட்டு
அண்ணாவை இன்று ஒருநாள் மட்டும்,
மலர்கள் தூவி நலம் விசாரிக்கப்படும்

இவரின் சிலைகள்
தூசித்தட்டி ,புதுப்பிக்கப்படும்,
மாலைகள் சூட்டி அழகுப்பார்க்கப்டும்,
மாலைக்குள் மறக்கப்படும்!

மீண்டும் அடுத்த வருடமே,
இவரின் நினைப்பு,
செப்டம்பர் - 15 மட்டும் மறுபிறப்பு !

2 கருத்துகள்: