1 ஏப்., 2010

குடந்தையின் அழகை







குடந்தையின் அழகை
கர்வத்தோடு,நீ சொல்லும்
கவியோடு,அதன் நடையோடு,
கண்டேன்!

என்னை நானே மறந்தேன்!
பெரியக் கடை வீதியில்,
நானும் இந்த நேரம் நடைப்
பழகினேன்!என்னை மறந்தேன்!

மூடி இருக்கும் கற்பகம் திரை அரங்கமும்,
உன் கவியால் ..
என் முன்னால் வந்துப் போனது,
தேவி திரை அரங்கமும்,பரணிகாவாக,
மாறினாலும்,உன்னால் 
பழையப்பெயரும் நினைவூட்டியது
உன் கவியால் வந்தது .

மல்லிகை மனம் என் மனத்தை,
பதம் பார்க்க,மீண்டும் உன் கவியை,
நான் படிக்க மனதுக்குள்  ,
ஆனந்தம்.
நான் என்ன சொல்வேன்,
என் நினைவுகளை...!
என் மண்ணின் மைந்தன் தந்த
கவிதை,என்னை பழைய,

பழகிய,நாட்களுக்கு ,

அழைத்துப் போனது...
என் மனம்
இப்பொழுது

கும்பகோணத்தில் உள்ளது!

எல்லாம் உன் கவிதை தந்தது !


2 கருத்துகள்: